ஆடிப்பிறப்பு

By திலகம்இராமகிருஸ்ணன் on July 17, 2021

ஆடிப்பிறப்பு === தமிழ்மக்கள்வழி இயற்கைவழி எல்லா உயிரினங்களின் வீடாகிய தாயாகிய பூமித்தாய் தன்னைத்தானே சுற்றி இரவு பகல் என ஒரு நாள் உண்டாகச்செய்து உயிரினங்கள் உண்டு உறங்க வழிசமைத்து பன்னிரண்டு மாத த்தில் சூரியனையும் சுற்றி வருகிறது,சூரியன் ஒவ்வொருமாதமும் நகர்கிறது, ஒவ்வொரு தமிழ்மாத முதல்நாள் சூரியன் நகர்கிறது, ஆடி முதல்நாள் (16. 4, 21)சூரியனும் நகர்கிறார்,எங்கள் பூமித்தாய் நீள்வட்டப்பாதையில் சுற்றிவந்து நாளைக்கு ஆடி ஆடி திரும்பி தனது புத்தாண்டுப் புள்ளியை அடைந்து தைமாதப் புத்தாண்டுஅன்று அடுத்த சுற்றைத் தொடங்கும்,இப்படியே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது,நம் முன்னோர்கள் எல்லாவற்றையும் பகுத்தறிவால் அறிந்து நடைமுறைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளார்கள், எனவே உலகதாயின் ஆடி ஆடி திரும்பி வரும் நாளாகிய ஆடிப்பிறப்பான நன்நாளை இனிப்பான கூழ் காச்சிக் குடித்தும் = இனிப்பான கொழுக்கட்டை அவித்துச் சாப்பிட்டும் கொண்டாடுவோம், உலக மக்கள எல்லோருக்கும் ஆடிப் பிறப்பு வாழ்த்துக்கள், ஆடிப்பிறப்பு நாளில் எல்லோரும் சண்டை சச்சரவின்றி சந்தோசமாக இருக்க வேண்டும், சண்டை சச்சரவுப்பட்டால் ழு ஆடி அதாவது ஏழு ஆடிவரும்வரை நிம்மதிஇன்றி வாழ்வார்கள், ஆடி மாதம் உ லக சக்தியை வணங்கி வாழவேண்டியமாதம், திலகம் இராமகிருஸ்ணன்,