செயல்திட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும். (March 2, 2024)

idaikkadu
Informed by : நா. மகேசன் கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

செயல்திட்டங்களும் அதை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும்.

“ சிலரின் திட்டங்கள் நல்லதாகத் தோன்றினால் அதனைச் செய்து முடிப்பது என்பதே இன்றைய நிலைப்பாடு ஆகும். “ ஆனால் இது எல்லோருக்கும் பயன்பாடு ஆக இருந்தால் செய்தவர்களுக்கு கெளரவத்தைக் கொடுக்கும். பயன்பாடு அற்று இருந்தால் அகெளரவத்தைக் கொடுக்கும். இந்த திட்டங்களின் செயல்பாட்டை நான்கு காரணங்கள்தான் கட்டுப்படுத்துகின்றது. அது என்ன? 1. நீதி. 2. நியாயம். 3. கடமை. 4. பொறுப்பு. இந்த நான்கையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால் அதற்கு இரு பெயர் உண்டு .அது என்ன? ஏமாற்றுதல் தான். ஆனால் இதற்கு நேர்மாறானதும் எதிர்மறையானதும் ஒன்று உள்ளது அது என்னவென்றால் எல்லோரும் விரும்புவதையும், எல்லோரும் ஏற்றுக் கொள்வதையும் செய்வதுதான்.
பொதுவாக நான் சொல்வேன் ஆண்களைவிட பெண்களுக்குத்தான் வேலை அதிகம். பகல்முழுவதும் வேலை செய்துவிட்டு இரவு தூங்கும்போது நள்ளிரவில் தன் பிள்ளை பசி என்று கேட்டால் தன் தூக்கத்தைவிட்டு எழுந்துகொள்ள விரும்புவாரா ?, இல்லையா? மறுமொழி ஆம்தான். ஏன் தன்பிள்ளை என்ற சுயநலம்தான். அதுபோல சில திட்டங்களை தங்களது சிரமத்தையும் பாராது, நேரத்தையும் பாராது, செயல்திட்டங்களை நிறைவேற்றுவது பொதுநலம் ஆகும். இவர்களுக்கு சமுதாயத்தில் உயர்ந்த கெளரவத்தைக் கொடுங்கள். முன்னோர்கள் செய்த பொதுப்பணிகளை நாம் அனுபவித்தோம். இது உண்மைதான் ஆனால் எங்களுக்கு ஒரு கடமைப்பாடு உள்ளது அது என்ன? எதிர்கால சந்ததியினருக்கான பொதுப்பணிகளை செய்வதுதான்.
நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டு இருக்கின்றீர்கள். அதுபோல மற்றவர்களும் உங்கள்மீது நம்பிக்கை கொள்ளக்கூடியமாதிரி நடவுங்கள் இதை நிலை நிறுத்துவது நியாயமான நடவடிக்கைகளாகும். உறுதியான செயல் திட்டங்களும், நேர்மையும், நீதியும் உங்களைச் சாதனையாளர்கள் என்ற பட்டியலுக்கு இட்டுச் செல்லும். இதைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் எதிர்மறையான பட்டியலுக்கு உங்களை இட்டுச் செல்லும். இதனால் நீங்கள் மற்றவர்களின் அவநம்பிக்கைக்கு ஆளாவீர்கள். ஒருவர் அளவுக்கு அதிகமாக பேசுவது தாழ்வு மனப்பான்மை ஆகும். இது சுய நம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு ஆகும். இது பிரிவும், புரிதலும் இல்லாத நிலைக்கு இட்டுச் செல்லும். இது ஒரு செயல் திட்டததை செய்வதற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமையும்.
நீங்கள் நம்பிக்கை என்ற விதைகளை, எல்லோர் மனதிலும் விதையுங்கள். நம்பிக்கை என்ற ஊற்றை எல்லோர் மனதிலும் உருவாக்குங்கள். நீங்கள் ஒர் செயல் திட்டதைத் தொடங்கும் பொழுது பாதுகாப்பு இன்மை, நிதி போதாமை , நிறைவேற்ற முடியாமை அல்லது தேவை அற்றவை என்றால் அந்த திட்டத்தை எல்லோரிடமும் கலந்து ஆலோசித்து, தொடங்குவதற்கு முதல் முடிவு எடுங்கள். தேவையற்றைவைகளையும் நிறைவேற்ற முடியாதவற்றையும் தொடங்கினால் …

More

நாகமுத்து.சிற்றம்பலம். (Jan. 25, 2024)

idaikkadu
Informed by : சூரியகுமார்
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இறுதிக் கிரியைகளின் விபரம்.
நாகமுத்து.சிற்றம்பலம்.
வெள்ளிக்கிழமை 26-01-2024, காலை 10 மணிக்கு இறுதிக் கிரியைகள் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று, தகனக் கிரியைகள் சாமித்திடல் இந்து மயானத்தில் இடம் பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்,
மகன் சூரியகுமார்
0705614861

More

திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை - இறைவனடி சேர்ந்தார். (Jan. 21, 2024)

idaikkadu
Informed by : க. சோமஸ்கந்தா
Contributed by : Sengo Vel
Card image cap

பிறப்பு : 26.03.1930 உதிர்வு: 20 . 01 . 2024
திருமதி. நாகம்மா கணபதிப்பிள்ளை
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகம்மா கணபதிப்பிள்ளை அவர்கள் 20.01.2024 சனிக்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்ற தபால் அத்தியட்சகர் கந்தையா கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான மயில்வாகனம்-இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அருமை மருமகளும், ரோகினிதேவி (America) , சியாமளா (Sri-Lanka ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் பாசமிகு அன்னையும் ஆவார். முத்துவேல்,சிவகுமார், விஜயகலா,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன்-சாம்பவி, சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப்பேத்தி, அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டம்மாவும்,
காலம் சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சரவணமுத்து, சிவகாமி அம்மை, கதிரவேலு,அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி, காலம் சென்றவர்களான ராஜகுலசிங்கம்,சபாரத்தினம்,சரஸ்வதி,சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

Viewing & Cremation
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave
ON , L1S – 2E3
பார்வைக்கு / கிரியை/தகனம்:
அன்னாரின் பூதவுடல் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை பி. ப 5 மணி முதல் பி.ப 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுதினம் இறுதிக்கிரியை 29-01- 2024
திங்கட்கிழமை அன்று முற்பகல் 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
சோமாஸ்கந்தா (மகன்)
416 299-4946
தகவல்: குடும்பத்தினர்.

More

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா (Jan. 9, 2024)

idaikkadu
Informed by : R. Selvarajah
Contributed by : Sengo Vel

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா

புதிய செயற்குழு (2024)விபரம்:

தலைவர் : திரு.செல்வராஜ் இரத்தினசபாபதி 647-407-8358
உப-தலைவர் : திரு.கணேசமூர்த்தி கந்தசாமி 437-970-2014
செயலாளர்: திரு.சிவபாலன் வேலுப்பிள்ளை 416-930-4026
உப-செயலாளர் : திரு.உதயணன் பொன்னையா 647-297-6552
பொருளாளர்: திரு.நாகேஸ்வரமூர்த்தி தம்பு 416-805-6371
உப-பொருளாளர்: திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம் 416-566-6523

செயற்குழு உறுப்பினர்:
செல்வி. சாருஜா அருணகிரி
செல்வி.சரண்யா உதயணன்
செல்வன்.சஜீசன் நாகேஸ்வரமூர்த்தி
செல்வன். சுஜிதன் நவகுமார்
செல்வன். நிந்துயன் தர்மலிங்கம்

காப்பாளர்கள்:
திரு.கேசவமூர்த்தி சபாரத்தினம்
திரு. நல்லதம்பி சிதம்பரப்பிள்ளை

தாயக இணைப்பாளர்
பேராசிரியர் திரு.சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை

e-mail. imv.osacanada@gmail.com
FB: Idaikkadu MV Osa-Canada

More

அறிவு புகட்டிய அன்னைக்கொரு ஆராதனை! (Jan. 8, 2024)

idaikkadu
Informed by : செயற்குழு
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
யா/ இடைக்காடு ம .வி - நூற்றாண்டு விழா -2026
எமது பாடசாலை யா/இடைக்காடு மகா வித்தியாலயம், தனது 100வது ஆண்டினை 2026 ம் (1926 - 2026) ஆண்டு நிறைவு செய்யவுள்ளது.
இந்நிகழ்வை பாடசாலை சமூகம், பழைய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஓரு இனிய விழாவாக நடாத்த முன்வந்துள்ளது.
அதன் பிரகாரம் கடந்த விஜயதசமி அன்று (24-10-2023) பாடசாலை அதிபரால் "நூற்றாண்டுவிழா பிரகடனம்" வைபவரீதியாக வெளியிடப்பட்டுள்ளது .
அதன் அடுத்த கட்டமாக 3-12-2023 அன்று நூற்றாண்டுவிழாவிற்கான விசேட செயற்குழு அதிபர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவினை திறம்பட நடத்துவதற்கும், அனைத்து பாடசாலை கட்டுமானங்களை புனர்நிர்மாணம் செய்யவும், கல்வி அடைவு மட்டத்தினை மேம்படுத்தவும் பாடசாலை சமூகம், கனடா வாழ் பழையமாணவர்களினதும், நலன்விரும்பிகளினதும் பங்களிப்பினை எமது சங்கத்தின் ஊடாக நாடியுள்ளது.
மேற்குறிப்பிட்ட திட்டங்களை திறம்பட நிறைவு செய்வதற்கு ரூபா 32, 769, 689 (3.28 கோடி) அளவில் தேவைப்படுகின்றது .
இத்தொகையின் ஒரு பகுதியாக குறைந்தப்பட்சம் 1 கோடி ரூபா (~CDN $50,000) பங்களிப்பினை கனடா வாழ் பழையமாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் அன்பளிப்பாக சேகரிக்க வேண்டியுள்ளது.
"அறிவு புகட்டிய அன்னைக்கொரு ஆராதனை" என்பதற்கு இணங்க உங்கள் அனைவரினதும் அன்பளிப்பினை அன்புடன் வரவேற்கின்றோம்!
நீங்கள் விரும்பிய தொகையினை கீழ் வரும் நூற்றாண்டு விழா நிதி சேகரிப்பு குழுவினருடன் தொடர்பு கொண்டு செலுத்தலாம்.
Selva Ratnasabapathy--------------------(647-407-8358 Brampton)
Ganesamoorthy Kandasamy--------------(437-970-2014 GTA)
Sivapalan Veluppillai----------------------(416-930-4026 GTA)
Uthayanan Ponniah -----------------------(647-297-6552 GTA)
Nageswaramoorthy Thampu--------------(416-805-6371 GTA)
Sivagnanaruban Sivagnanasundaram-----(416-566-6523 GTA)
Manoharan Ehamparam-------------------(647-240-4296 GTA)
Sivapalan Sinnathamby (Sivam)-----------(647-215-9130 GTA)
Navakumar Subramaniam-----------------(416-525-6299 GTA)
Thushyanthy Nadesapillai-----------------(514-238-3535 Montreal)
Subajini Kugathasan-----------------------(514-465-4138 Montreal)
Paramasivam Saravanamuthu-------------(514-617-3150 Montreal)
Mahendram Nagamuthu------------------(514-886-8659 Montreal)
Youth Committee:
Thushyan Navakumar
Sinthuyan Uthayanan
Kapilan Ratnasabapathy
Saruja Arunagiri
Saranya Uthayanan
Sujithan Navakumar
Ninthuyan Tharmalingam
Sajeesan Nageswaramoortrhy
நன்றி!
செயற்குழு
IMV -OSA Canada

More

மனிதனா? மருத்துவமா? (Jan. 7, 2024)

idaikkadu
Informed by : நா. மகேசன் கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

மனிதனா ?........மருத்துவமா ?...... 🥰
டீசல், மண்ணெண்ணை, பெற்றோல்,---- வாதம், சுரம், பித்தம் --- இது என்ன. இயந்திரத்திற்கு ஒப்பாக மனிதனை ஒப்பிடுகிறேன் என நினைக்கலாம். டீசல் இயந்திரத்திற்கு பெற்றோல் ஊற்றினால் இயந்திரம் வேலை செய்யமாட்டாது. பெற்றோல் இயந்திரத்திற்கு டீசல் ஊற்றினால் அதுவும் வேலை செய்யமாட்டாது. இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்ன? வாதம் உள்ளவர்கள் வாத உணவைத் தவிருங்கள். சுரம் உள்ளவர்கள் சுர உணவைத் தவிருங்கள். பித்தம் உள்ளவர்கள் பித்த உணவைத் தவிருங்கள். நான் சொல்வேன் எல்ல நோய்களுக்கும் முதல் மருந்து உணவுக் கட்டுப்பாடுதான். அதன் பிறகுதான் மருத்துவங்கள்.
மனித நாகரீகத்தில் கண்டுபிடிப்புக்களில் பயன் மிக்கதும், உபயோகம் உள்ளதும், தீங்கு இல்லாததுமான கண்டுபிடிப்பு மருத்துவம்தான் சில கண்டுபிடிப்புக்கள் மனிதனுக்கு மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றது. உலகத்திலே எத்தனை மருத்துவமுறை இருந்தாலும் ( WHO ) வால் அங்கீகரிக்கப்பட்டது 124 மருத்துவ முறைகள்தான். ஆதிகாலத்தில் பல மருத்துவ முறைகள் இருந்தன, இவை எல்லாவற்றிலும் முக்கியமானது சித்தர் மருத்துவம்தான். இது எங்கள் தமிழர்களின் மருத்துவம். இந்த மருத்துவம் தோன்றி 20,,000 வருடங்கள் ஆகின்றது. அதன்பின் ரோமர் வேதம் கி.பி 300, யுனானி கி.பி 600, கிரேக்கம் மற்றும் ஆயுர்வேதம் கி.பி 900 வருடங்களாகின்றன. இன்று இரண்டு விதமான மருத்துவமுறைக:ள் மனிதர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்ட மெக்கலே கல்வித்திட்டம் கி.பி 1780 ல் தோன்றியது ஆகும்.கி.பி 1719 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட அலோபதி மருத்துவம்தான். இதுதான் ஆங்கில மருத்துவம். மற்றது பாரம்பரிய மருத்துவமுறை, நடைமுறைப் பகுத்தறிவு வேறு, அனுபவ அறிவு வேறு, புத்தக அறிவு வேறு இதை நன்றாக புரிந்து கொண்டவர்கள் பாரம் பரிய மருத்துவ முறைகளைக் குறைகூற மாட்டார்கள்.
இனி மருத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம். ஆங்கில மருத்துவ முறைகளில் சில பக்கவிளைவுகள் வரும். சில நேரங்களில் மரணம்கூட வரும் ஆனால் இவ் மருத்துவமுறையிலும் பல நன்மைகள் இருக்கின்றன விபத்துக்கள் எலும்பு முறிவுகள், இரத்தப்போக்கு போன்றவைகளுக்கு இது மிகவும் சிறந்த மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவத்தில் பக்க விளைவுகள் இல்ல ஆனால் அனுபவமிக்கவர்கள் அல்லது சித்த மருத்துவர்களின் ஆதரவுடன் பயன்படுத்துவது சாலச் சிறந்தது. உதாரணமாக 5 கிராம் உப்பை நீரில் கரைத்துக் குடித்தால் பசி எடுக்கும், 10 கிராம் உப்பை குடித்தால் வாந்தி எடுக்கும். 20 கிராம் எடுத்தால் பேதியாகும். உலகத்திலே 20 இலட்சம் மூலிகைகள் இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளார்கள். மனிதனுக்கு 4448 நோய்கள் இருப்பதாக கூறுகிறார்கள் ஆனால் இவை …

More

தரம் 5 புலமை பரிசு 2023 (Dec. 10, 2023)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

மகா வித்தியாலயத்தில் 2023ல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்களின் நினைவாக மகன் அருள்வாசன் சுவாமிநாதன் [ஓம் நமசிவாய] அவர்களால் சேமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது,

More

இ.ம.வி 100 ஆண்டு விழா கலந்துரையாடல் அறிக்கை. (Nov. 28, 2023)

idaikkadu
Informed by : K. Nagulan
Contributed by : Sengo Vel
Card image cap

Please double click on the image to read the report fully.

More

இ. ம வி நூற்றாண்டு விழா கலந்துரையாடல் (Nov. 25, 2023)

idaikkadu
Informed by : சு. திலீபன்
Contributed by : Sengo Vel
Card image cap

காலம் : 03/12/2023
இடம் : பிரதான மண்டபம்
நேரம் : 9:00 மணி

More

IMV-OSA-CANADA WINTER GET TOGETHER-2023 (Nov. 18, 2023)

idaikkadu
Informed by : IMV-OSA Committee
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

Dear All,
We have less than weeks left until Nov 30th to confirm the attendees and the program participants list. We need to order the participant's trophies in advance. If your kids are planning to participate in any program, please let us know.
Up to now, we have 5 programs registered.
Thank you.
IMV-OSA Committee

More

யா/இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சம்பந்தமான விசேட கலந்துரையாடல் (Nov. 17, 2023)

idaikkadu
Informed by : S. Thileepan
Contributed by : Sengo Vel

யா/இடைக்காடு மகா வித்தியாலய நூற்றாண்டு விழா சம்பந்தமான விசேட கலந்துரையாடல்

மேற்படி விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 19.11.2023 திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 6.00 மணிக்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்து தங்களது ஆக்கப்பூர்வமான கருத்துகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிபர்
Topic: IMV 100 years
Time: Nov 19, 2023 06:00 PM Colombo

Join Zoom Meeting
https://us05web.zoom.us/j/8736663055?pwd=bVg2UWdRVGVkR1NYVUM3ZHhWNGVlQT09&omn=89047638372

Meeting ID: 873 666 3055
Passcode: imv

More

அகவை ஐம்பது பழைய மாணவர் அன்பளிப்ப (Nov. 13, 2023)

idaikkadu
Informed by : செ. செல்வவேல்
Contributed by : Sengo Vel
Card image cap

அமரத்துவ மடைந்த எமது வகுப்பு நண்பர்களின் ஞாபகார்த்த மாக, 1988 o/l 1991 a/l இல் கல்விகற்ற மாணவர்களின் பங்களிப்பினால் ரூபா 1.15 மில்லியன் புலமைப்பரிசில் நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

More

பொன்னையா. முருகையா (Sept. 13, 2023)

idaikkadu
Informed by : மகன் மகிபன்
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

மரண அறிவித்தல்
யாழ்.இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா. முருகையா (ஓய்வுநிலை இ.போ.ச) அவர்கள் 13-09-2023, மதியம் 1.30 மணியளவில் திருமலையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்ற முருகையா சின்னத்தங்கத்தின் அன்புக் கணவரும் விஜிதா, மகிபன் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், சுரேஸ்குமார் (பொறியியலாளர்), வனிதா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவர். அன்னாரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை 14-09-2023, மாலை
2 மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, சாமித்திடல் இந்து மயாணத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:
மகன் மகிபன்- 5146926910
மகள் விஜி - 0773414526,
மருமகன் சுரேஷ் - 0773430278,

More

பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல் நிகழ்வு (Sept. 4, 2023)

idaikkadu
Informed by : ந. உதயகுமார் (லண்டன் )
Contributed by : Elango veluppillai
Card image cap

பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல்
எமது மகள் பிள்ளை திவானியின் 20வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மகளின் பெயர் என்றென்றும் அழியாத நினைவோடு பல நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்திருக்க வேண்டும் என்பதினை மனதிற்கொண்டு இப் பிள்ளை திவானி நீர்த்தடாகம் எம்மால் அமைக்கப்பட்டு இன்று 03-9-2023 புது பொங்கல் நிகழ்வு மூலம் பாவனைக்கு அர்பணித்துள்ளோம்!

ஊருக்கு சென்று வரும் காலங்களில் கடும் கோடைகாலங்களில் மாடு, ஆடு, நாய்கள்,உட்பட சகல யீவராசிகளும் தாகத்தினால் கஸ்டப்படுவதினை அவ்வப்போது அவதானித்ததினை மனதிற்கொண்டு இப்படியான ஒரு தடாகம் எமது மகளின் பெயரினால் அமைக்கவேண்டும் என்ற எண்ணக்கரு மனதில் தோன்றியதினை எனது நண்பனும் சகோதரமுறையுமானவரான சிவகுமார் (சிவன்)அவர்களுடன் திடீரென கதைத்தபோது நீர் வரத்தேவயில்லை நானே ஆட்களை தமது இடத்திலிருந்து கூட்டிச்சென்று தானே கூட நின்று செய்து முடிப்பேன் என சொன்னது மட்டுமல்ல அவ்வாறே தமது வேலைகளையும் பொருட்படுத்தாது இரண்டரை மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து நின்று இவ் அரும்பெரும் பணியில் தம்மை முற்று முழுதாக அர்பணித்து யாவரும் வியந்து நோக்கும் வண்ணம் நேர்த்தியாக வடிமைத்து இன்றைய தினம் புது பொங்கல் நிகழ்வினையும் முன்னின்று நடாத்திப் பாவனைக்கு அற்பணிக்க மிகமிக உதவியாக நின்ற நல்ல உள்ளத்திற்கு என்றென்றும் நன்றியோடு கடமைப்பட்டுள்ளோம்!
இத்துடன் பண்டைய காலத்தில் பாவனையில் இருந்து தற்போது அழிவடைந்து காணக்கிடைக்காத சுமைதாங்கி,ஆவுரோஞ்சிக்கல்,என்றென்றும் தடாக நீர் சுத்தமாகவும் புனிதமாகவும் இருப்பதினை உறுதி செய்ய தடாக நீர் மத்தியில் கருங்கல்லினால் ஆன பிள்ளையார் சிலையும் நிறுவி மேலும் பொலிவுடன் பிள்ளை திவானி நீர்த்தடாகம் பாவனைக்கு இன்று மகள் சார்பில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதினை பணிவோடு அறியத்தருகின்றோம்! மேலும் எக் கோடை காலத்திலும் வற்றாத நீர் மேலாண்மையுடனும் உள்ளூர் கிணற்று நீரின் தரத்திற்கு எள்ளவும் குறையாத சுவையுடனும் ஆடு, மாடு, பறவைகள், மற்றும் சகலவிதமான ஊர்வன முதற்கொண்டு சுயமாக நீர் அருந்தக்கூடிய அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது !மேலும் நீர்த்தடாகத்தினை சூழ உள்ள பகுதியில் முற்று முழுதாக எக்காலத்திலும் இலை உதிர்க்காததும் உதிர்க்கும் இலைகளை ஆடு, மாடு விரும்பி உண்ணும் பலா மரக்கன்றுகளும் , ஆலமரம் மற்றும் தென்னம்பிள்ளை ஒன்றும் தகுந்த பாதுகாப்பு வேலி அமைத்து செம்மண் பரப்பி நாட்டப்பட்டுள்ளது என்பது வரும் இரண்டு மூன்று வருடங்களில் நிழல்சார்ந்த குளிர்ச்சியான பிள்ளை திவானி திடலாக அமையும் என்ற நம்பிக்கையுடன் !
பிள்ளை . திவானி,பிறேமளா. உதயகுமார் !

More

பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல் (Aug. 29, 2023)

idaikkadu
Informed by : ந. உதயகுமார் (லண்டன் )
Contributed by : Elango veluppillai
Card image cap

பிள்ளை திவானி நீர்த்தடாக பொங்கல் நிகழ்வு ============= எமது பிள்ளை திவானி திடலில் எக் கோடை காலத்திலும் கால் நடைகள் சுயமாக நீர் அருந்தக்கூடிய வடிவமைப்பில் அமைக்கபட்ட பிள்ளை திவானி நீர்த்தடாகத்தில் எதிர் வரும் 03/9/2023 காலை9 மணியளவில் புது பொங்கல் நிகழ்வு நடைபெறும் . அத்தருணம் யாவரும் பங்கு பற்றி இப் பொது நல முயற்சியினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்! இப்படிக்கு ————— பிள்ளை திவானி ,பிள்ளை திவானி சார்ந்த குடும்பத்தினர் சார்பாக சுப்பிரமணியம் சிவகுமார் , சியாமளா தம்பதிகள் சூரியகாந்தன்( காந்தி) கதிரவேலு நகுலன் நன்றி

More

புலமை பரிசில் வழங்கல் (Aug. 20, 2023)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்களின் நினைவாக மகன் அருள்வாசன் சுவாமிநாதன் [ஓம் நமசிவாய] அவர்களால் சேமிப்பு சான்றிதழ்கள் வழங்கி வைகஂகப்பட்டது. அ்த்துடன் பின்தங்கிய பொருளாதாரமுடைய மாணவிக்கு துவிச்சக்கரம் ஒன்றும் வழங்கப்பட்டது.
அவரது சேவை தொடர வாழ்த்துக்கள்.

More

மழலைகள் விளையாட்டு விழா 2023 (Aug. 15, 2023)

idaikkadu
Informed by : முன் பள்ளி நிர்வாகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

மழலைகள் விளையாட்டு விழா 2023

More

இராசலட்சுமி சண்முகநாதன் காலமானார் (Aug. 10, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி இராசலட்சுமி சண்முகநாதன்
வளலாய் அச்சுவேலி
இவர் அமரர் ச.சண்முகநாதனின் அன்பு மனைவியும் கிருத்திகா மதுசன் ஆகியோரின் பாசமிகு அன்னையுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தற்போது வளலாய்மேற்கில் உள்ள அன்னாரின் இல்லத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

More

இளைப்பாறிய ஆசிரியர் செல்வநாயகம் தங்கம்மா இன்று காலமானார் (Aug. 10, 2023)

idaikkadu
Informed by : குணம் சுவிஸ்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
10.08.2023 வியாழக்கிழமை இளைப்பாறிய ஆசிரியர் செல்வநாயகம் தங்கம்மா இன்று இடைக்காட்டில் தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தர். இவர் காலம் சென்ற செல்வநாயகத்தின் அன்பு மனைவியும். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வனஜா பவானி லண்டனைச் சேர்ந்த சுமதி சுவிசை சேர்ந்த சுசி ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார். அன்னாரின் பூத உடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13.08.2023 இடைக்காட்டில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
தொடர்புகளுக்கு
வனஜா 0061 394 365 964
பவானி 0061 402 167 43 - 0061 402 167 304
சுமதி 0044 79 830 274 54- 0044 798 027 454
சுசி 0041 79 854 66 00 - 0041 796 075 093

More

திரு கிருஷ்ணர் லோகநாதன் (லோகேஸ்) காலமானார் (Aug. 1, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திரு கிருஷ்ணர் லோகநாதன்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு கிருஷ்ணர் லோகநாதன் இன்று 01.08.2023 செவ்வாய்க்கிழமை இரவு இறைவனடி சேர்ந்து விட்டார். அன்னார் காலம் சென்ற கிருஷ்ணர் அவர்களின் மகனும் பத்மினியின் அன்புக்கணவரும் கஜமுகா, ஹருணிகா ஆகியோரின் பாசமிகு அப்பாவும் மணிமேகலை (ஆசிரியை)அவர்களின் அன்பு அண்ணாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02.08.2023 புதன்கிழமை மு.ப. 10.00
மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நீர்ப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் .

More

அம்பாள் முன்பள்ளி பொதுக்கூட்டம் -ஆடி2023 (July 28, 2023)

idaikkadu
Informed by : நிர்வாகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

அம்பாள் முன்பள்ளி🌺

🌷பொதுக்கூட்டம் -ஆடி2023💐

🏫இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் பொதுக்கூட்ட நிகழ்வு.

☀காலம் - 29/07/2023(சனிக்கிழமை)

⭐இடம் - இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி.

☀நேரம் - காலை 9.00

-நிர்வாகம்-

இடைக்காடு புவனேஸ்வரி
அம்பாள் முன் பள்ளி

ஆடி - 2023

முன்பள்ளி சிறார்களுக்கான. ஒரு வாரகாலத்துக்கு தேவையான சத்துமா செலவீனம் அண்ணளவாக 5000/=செலவாகிறது.அச் செலவுத் தெகையினை சுற்றுலாவிற்கு தாங்கள் வழங்கிய நிதி பங்களிப்பின் மிகுதியில் இருந்து வழங்கினோம் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

🙏🙏🙏
நன்றி
-நிர்வாகம்-
🙅இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி🌺

🌷பொதுக்கூட்டம் -ஆடி2023💐

🏫இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் பொதுக்கூட்ட நிகழ்வு.

☀காலம் - 29/07/2023(சனிக்கிழமை)

⭐இடம் - இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி.

☀நேரம் - காலை 9.00

🌸🌺 நிகழ்ச்சி நிரல் 🎀♦

1) இறைவணக்கம் - 9.05 - 9.08Am

2) தலைமையுரை - 9.10 - 9.20Am

3) செயலாளர் அறிக்கை - 9.20 - 9.25Am

4) கணக்கறிக்கை வாசித்தல் 9.25 -9.50 Am

5)நிதி ஆளுகைக்குழு தலைவர் உரை - 9.50 -9.55Am

6) புதிய நிர்வாகத் தெரிவு 9.55 -10.20Am

7) புதிய நிர்வாக தலைவர் உரை - 10.20 -10.25Am

8) புதிய நிர்வாக செயலாளர் நன்றியுரை. 10.25 -130Am

9) பழைய நிர்வாகத்தினரிடம் இருந்து புதிய நிர்வாகத்தினர் ஆவணங்களைப் பொறுப்பேற்றல்.

10) புதிய நிர்வாக அங்கத்தவர்கள் குழு புகைப்படம் எடுத்தல்.

நன்றி
🙏

-நிர்வாகம்-

More

திரு காசிலிங்கம் செல்லத்துரை இறைவனடி சேர்ந்தார் (July 28, 2023)

idaikkadu
Informed by : K. Kunakaran
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட காசிலிங்கம் செல்லத்துரை (ஓய்வு நிலை அஞ்சல் அத்தியட்சகர் முல்லைத்தீவு மாவட்டம்,ஓய்வு நிலை தபாலதிபர்) அவர்கள் 2023/07/28 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதமடைந்தார் அன்னார் தெய்வானையின் அன்புக்கணவரும் நாகநந்தினி (கனடா) ,செல்வவேல்(ஆசிரியர் யா/ ஆவரங்கால்நடராஜ இராமலிங்கவித்தியாலயம்), இரத்தினவேல்( கனடா), நாகசொரூபி(இடைக்காடு) ,செந்தில்வேல்(நெதர்லாந்து ), நாகநளினி(இடைக்காடு)ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவர். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 2023.07.31 (திங்கள்) அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் உற்றார்,உறவினர் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

-தகவல் குடும்பத்தினர்-

More

சிவரத்தினம் சுந்தரவேல் இறைபதம் அடைந்தார் (July 17, 2023)

idaikkadu
Informed by : ந சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
சிவரத்தினம் சுந்தரவேல்🙏🙏🙏
அஞ்சலக அதிபர்
புத்தூர்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட சிவரத்தினம் சுந்தரவேல் சற்று முன்னர் நள்ளிரவு 12.30 மணிக்கு இறைவனடி சேர்ந்தார்.
இவர் அமரர்கள் சிவரத்தினம் இராசம்மா மண இணையரின் மகனும் தாரணியின் ( அஞ்சலக அதிபர்) பாசமிகு துணைவரும் முருகவேல் சிவேஸ்வரி சந்நிதிவேல்.சிவலோஜினி ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்
இறுதிக்கிரியைகள் அன்னாரின் புத்தூரில் உள்ள இல்லத்தில் இன்று 16.07.2023. ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணிக்கு ஆரம்பமாகும். பின்னர் பூதவுடல் புத்தூர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

More

திருமதி ஜெயராணி சண்முகநாதன் இறைவனடி சேரந்தார் (June 29, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி ஜெயராணி சண்முகநாதன்
இடைக்காடு அச்சுவேலி
ஓய்வு நிலை ஆசிரியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெயராணி சண்முகநாதன் இன்று காலை இடைக்காட்டில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
இவர் சண்முகநாதன் (ஓய்வு நிலை கூட்டுறவு முகாமையாளரின் பாசமிகு மனைவியும் சிவகுமார் சசிகுமார் பிரேம்குமார் ஆகியோரின் அன்புச் சித்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று 29.06.2033 வியாழக்கிழமை பி.ப 4.00 மணியளவில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

More

கண்ணீர் அஞ்சலி செல்வி ஆறுமுகசாமி தவலட்சுமி (June 19, 2023)

idaikkadu
Informed by : N Swaminathan
Contributed by : Sengo Vel
Card image cap

கண்ணீர் அஞ்சலி
செல்வி ஆறுமுகசாமி தவலட்சுமி
தம்பக்கடவை இடைக்காடு அச்சுவேலி
இடைக்காட்டை பிறபீபிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இன்று காலை இறைவனடி சேர்ந்தார். ஓம் சாந்தி ஓம் சாந்தி
துயருறும்குடும்ப உறவுகளுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் தரப்படும்.ஔ

More

Prof. Coomarasamy’s work recognised by His Majesty the King (June 19, 2023)

idaikkadu
Informed by : IVWA
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.

இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ மற்றும் பல் மருத்துவ அறிவியல் கல்லூரியிலும், மகளிர் மருத்துவ மற்றும் பரிசோதனை மருத்துவப் கல்லூரியிலும் மருத்துவப் பேராசிரியராகவும், பேர்மிங்காம் பெண்கள் மருத்துவமனை அறக்கட்டளையில் மகளிர் மருத்துவம், இனப்பெருக்க மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் பணியாற்றுகிறார்.

மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்
பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ள உயர் விருது | The Highest Award For A Tamil In Britain

இவருக்கு கிடைத்த இந்த உயர் விருது குறித்து birmingham women's and children's hospital (BWC) தனது உத்தியோகபூர்வ தளத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

எங்கள் BWC குழுமத்தில் மிகவும் விரும்பப்படும் உறுப்பினரான பேராசிரியர் அரி. குமாரசாமி, பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு உதவுவதில் தனது ஆராய்ச்சியின் மூலம் அவர் ஆற்றிய பணியைப் பாராட்டி, மாட்சிமை மிக்க மன்னரால் OBE விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், பெருமிதம் கொள்கிறோம்.

நமது மகளிர் மருத்துவமனையில் பணிபுரியும் பேராசிரியர் குமாரசாமி, உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கருச்சிதைவு மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான ரத்தப்போக்கு போன்றவற்றிற்கான ஆராய்ச்சியாளராக களமிறங்கி தன் சேவையை தொடர்கிறார்.

எங்கள் அறக்கட்டளையின் மகப்பேறு மருத்துவ ஆலோசகரான, பேராசிரியர் குமாரசாமி பேர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் பெண்ணோயியல் மற்றும் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியராகவும், ரொமியின் கருச்சிதைவு ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநராகவும், உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மகளிர் ஒத்துழைப்பு மையத்தின் இணை இயக்குநராகவும் உள்ளார்.

மேலும் பிரித்தானியாவில் இவரால் ஆரம்பிக்கப்பட்ட அம்மாலைஃப் என்ற தொண்டு நிறுவனம், குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் மகப்பேறு இறப்புகளைக் குறைக்கும் உலகளாவிய நோக்கத்துடன் தனது சேவையை தொடர்கிறது. அத்துடன், பேராசிரியர் குமாரசாமி இளம் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டுவதில் ஆர்வமாக உள்ளார், மேலும் அவரிடம் பயிற்சி பெற்ற பலர் சிறந்த மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களாக உருவாகியுள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கான விஷயங்களை மேம்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் என்பவற்றை கௌரவித்து ஜூன் 16 வெள்ளிக்கிழமை மூன்றாவது மன்னர் சார்லஸ் அவர்களின் பிறந்தநாள் …

More

மரண அறிவித்தல் (May 31, 2023)

idaikkadu
Informed by : மகிபன் (மகன் ). கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் 30-05 -2023 செவ்வாய்க்கிழமை மாலை 1-50 மணியளவில் இறைபதமடைந்தார்.
வட்டவளவு, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், புதியபூமி, இடைக்காடு திருகோணமலை இராஜவரோதயம் சதுக்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி முருகையா சின்னத்தங்கம் திருகோணமலையில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற நாகமுத்து – மாணிக்கம் தம்பதிகளின் மகளும், காலம் சென்ற பொன்னையா – பொன்னம்மா ஆகியோரின் மருமகளும், முருகையாவின் அன்பு மனைவியும்,, விஜிதா, மகிபன், ஆகியோரின் அன்புத் தாயாரும், சுரேஸ்குமார், வனிதா ஆகியோரின் அன்பு மாமியும், , யஷ்மிகன், லவிட்சன் , கிசாலினி, நிகலினி ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார் ஆவார்.
மேலும் அன்னார் சிற்றம்பலம், முருகேசு, கந்தசாமி, வள்ளிநாயகி, நாகேஸ்வரி, இராமநாதன், மகேந்திரன், மகேஸ்வரன், செல்வபவன் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
மேலும் அன்னார் தேவசிகாமணி, சிறீவள்ளி, இராஜேஸ்வரி, சங்கரப்பிள்ளை, சிவபாதசுந்தரம் ,ராகினி, மைதிலி, கலா சிவலோஜினி, காலம் சென்றவர்களான தியாகராஜா, கனகராஜா, வேலாயுதபிள்ளை, கண்மணீ,அன்னம் மற்றும் சிவகாமி, மீனாட்சி, நடராசா ,ஆகியோரின் அன்பு மைத்துணியுமாவார்.
அன்னரின் இறுதிக்கிரியைகள் 04 – 06 -2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; மகள் ; - 94773414526
மருமகன் ; - 94773430278
மகன் ( கனடாஃ ) ;- 514 692 6910

More

நீத்தார் பெருமை (May 19, 2023)

idaikkadu
Informed by : நா. இ. ஈசுவரன். கனடா.
Contributed by : Elango veluppillai
Card image cap

நீத்தார் பெருமை
அமரர் திரு விஸ்வலிங்கம் சிவபாலன்
திரு சிவபாலன் அவர்கள் இடைக்காட்டில் திரு விஸ்வலிங்கம் அவர்களுக்கு மூத்த மகனாகப் பிறந்து உரிய முறையில் கல்வி கற்று, பின் விவசாயத் துறையில் ஈடுபட்டு விசுவமடு படித்த வாலிபர் திட்டத்தில் காணி ஒன்றைப் பெற்று விவசாயம் செய்து வந்தார். திருமணத்தின் பின் அவர் இடைக்காட்டில் தன் விவசாய முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
அவருக்கும் எனக்குமான நட்பு நான் புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரிக்கு உயர்தர வகுப்புக்குச் சென்றபோதுதான் ஏற்பட்டது. அவரின் இயல்பான நகைச்சுவைப் பேச்சு, நேர்மை, உண்மை, ஆளுமை என்பன எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் எமது நட்பு இறுதிவரை இருந்தது. அவரின் இறப்பிற்கு ஒருமாதம் முன் நான் அவரை தாயகம் சென்று சந்தித்து அவருடன் பல விடயங்களையும் கலந்துரையாடியிருந்தேன்.
மாணிக்க இடைக்காடர் சன சமூக நிலையத்தின் நிர்வாகத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியதுடன், பல்வேறு சமூக நலத்திட்டங்களில் இருவரும் இணைந்து பல்வேறு அலுவலகங்களுக்கும் சென்று பல பணிகளை எமதூருக்கு செய்துள்ளோம். அவரின் நேர்மை, பொதுவிடயங்களில் அவரின் ஆளுமை, செய்கின்ற வேலைத்திட்டங்களுக்கான வரவு, செலவு களில் மிகவும் சரியான அறிக்கைகள் போன்ற விடயங்களில் அவர் எப்போதும் மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், இப்படித்தான் வாழவேண்டும் என்று மற்றவர்களுக்கு ஓர் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார். அதிலும் மக்கள் நலன் புரிச் சங்கத்தின் மூலம் ஊர் மக்களுக்கு அவர் அளப்பரிய சேவைகளைப் புரிந்துள்ளார். முக்கியமாக பாரிய நேய்வாய்ப்பட்ட பலருக்கு புலம் பெயர் வாழ் மக்களின் நிதிப் பங்களிப்போடு மிகச் சிறந்த வைத்திய வசதியை வழங்கி அவர்களை இயல்புநிலை வாழ்க்கைக்கு திரும்ப செய்துள்ளமை எவராலும் மறக்கவோ, மறுக்கவோ முடியாத விடயமாகும். எவரும் அவரை நோக்கி விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாதவராக வாழ்ந்து காட்டியுள்ளார். அதன் பயனாக இடைக்காட்டிலுள்ள சமூக அமைப்புக்கள் எதிலும் அவருக்கு முன்னுரிமையை ஊர் மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
ஒருவனின் சிறப்பை அவர் வாழும்காலங்களில் தெரியாது, அவரின் இறப்பின் போதுதான் தெரியும் என்பார்கள். அதுபோல அவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இடைக்காடு மாணிக்க இடைக்காடர் சன சமூக நிலையம், இடைக்காடு கிராம அபிவிருத்தி சங்கம், அச்சுவேலி பல நோக்க கூட்டுறவு சங்கம், இடைக்காடு புவனேஸ்வரி முன்பள்ளி, இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கம் என்பன கண்ணீர் அஞ்சலி பதாதைகளை வைத்து அவருக்கு மரியாதையுடன் கூடிய அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள். எனக்குத் தெரிந்து இந்த அளவு அஞ்சலி பதாதைகள் இடைக்காட்டில் வேறு எவருக்கும் வைத்தது கிடையாது …

More

IWFA Member Speech (May 16, 2023)

idaikkadu
Informed by : N.Mahesan
Contributed by : Mahesan Nagamuthu

திரு செல்லையா நடராசா (பெருமாள்) ஓய்வு நிலை தபாலதிபர் இனைவனடி சேர்ந்தார் (May 7, 2023)

idaikkadu
Informed by : ந சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திரு செல்லையா நடராசா (பெருமாள்)
ஓய்வு நிலை தபாலதிபர்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் இடைக்காடு வளலாய் ஆகியவற்றை வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்லையா நடராசா இன்று 06.05.2023 காலை இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரவியம்மாவின் அன்புத் துணைவரும் அகிலன் நந்தினி ( ஆசிரியை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக் கிழமை வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று வளலாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

More

மரண அறிவித்தல் சின்னப்பாபிள்ளை கிருஷ்ணகுமார் (May 1, 2023)

idaikkadu
Informed by : N.Swaminathan
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
சின்னப்பாபிள்ளை கிருஷ்ணகுமார்
இடைக்காடு அச்சுவேலி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட, அமரர்
சின்னப்பாபிள்ளை(பிராந்திய தபால் அத்தியட்சகர்) வள்ளிநாயகி தம்பதிகளின் புதல்வன் கிருஸ்ணகுமார் இன்று இடைக்காட்டில் இறைபதமடைந்தார் . இவர் நவமலர் ரஞ்சிதமலர் சறோஜாதேவி மூத்தாம்பிகை இந்திராணி அவர்களின் அன்புச் சகோதரனும் விமலநாதன் சிவகுமாரன் செந்தில்குமரன் விஜிதாம்பிரநாதன் அவர்களிஆகியோரின் சகலனும் சுஜர்சன் -கட்டார் சுதாஜினி இடைக்காடு வெனிசா சிஜாந்தன்-கனடா சினேகா திவியன் பிரான்ஸ் ஆகியோரின் மாமானும் ஆவார் அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 02.05.2023 அன்று இடைக்காட்டில் இடம்பெறும்

More

திரு விசுவலிங்கம் சிவபாலன் இறைவனடி சேரந்தார் (April 28, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திரு விசுவலிங்கம் சிவபாலன்
இடைக்காடு அச்சுவேலி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு விசுவலிங்கம் சிவபாலன் கடந்த இரவு 1.30 மணியளவில் 28.04.2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர் கமலாதேவியின் அன்புத் துணைவரும் சுந்தரமூர்த்தி அமரர் செல்வமணி சரவணபவன் ஆறுமுகநாதன் கணேசலிங்கத்தின் பாசமிகு அண்ணாவும் தெய்வநாயகி சிறிகாந்தன் கருணாநிதி கிருஸ்ணமூர்த்தி ஆகியோரின் மைத்துனருமாவார்..
இடைக்காட்டில் நடைபெறவுள்ள இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் வெளியாகும்.

More

மரண அறிவித்தல் (April 15, 2023)

idaikkadu
Informed by : webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

தோற்றம்: மார்ச் 27 1950
மறைவு : ஏப்ரல் 12 2023

திருமதி ஜெயராணி யோகிராஜ் இன்று 12/ 4/ 2023 கனடாவில்இறைபதம் அடைந்துள்ளார். மேலதிக விபரங்கள் பின்னர் அறிய தரப்படும் .

Service Details :
Sunday, April 16th, 2023 5:00 P.M – 9:00 P.M
Monday, April 17th,2023 5:30 A.M – 7:30 A.M
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
MARKHAM,ON

More

இடைக்காடு குறும்பட சிற்பிகள் வழங்கும் புறக்கணிப்பு குறும்படம் . (April 2, 2023)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai

மரண அறிவித்தல் (March 28, 2023)

idaikkadu
Informed by : நா. இ. ஈசுவரன் ( மைத்துணர் ) கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்

வேலுப்பிள்ளை வைரமுத்து ( ஓய்வுநிலை மருத்துவர் ) இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், யாழ் /கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு வேலுப்பிள்ளை வைரமுத்து ( ஓய்வுநிலை மருத்துவர் ) சற்றுமுன் கந்தமடத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் இராசேஸ்வரியின் அன்புக் கணவரும், மங்கையர்க்கரசியின் அன்புச் சகோதரனும், பொற்செல்வி, கமலநாயகி, செல்வவேல், தயாபவன் ஆகியோரின் அன்புத்தந்தையும், செங்கோ, அமுதினி, நீதிமப்பிரியா ஆகியோரின் அன்பு மாமனாரும், சேதன், பிரசாந், சேயோன், மதுரன், யானு, தான்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
மேலும் அன்னார் கந்தசாமி (ஓய்வுநிலை மருத்துவர் ) , சுவாமிநாதன், நாகேஸ்வரி, இடைக்காடர் ஈசுவரன், இடைக்காடர் சின்னையா, இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.
அன்னரின் இறுதிக் கிரியைகள் வியாழக்கிழமை கந்தர்மடத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும். இவ் அறிவித்தலை உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் ; நா. இ. ஈசுவரன் ( மைத்துணர் ) கனடா. – 416- 431- 7236 / 647 291 4314
தொடர்புகளுக்கு
வீடு ; 0212224652
செல்வவேல் மகன் - 0718096756 / 0764969100

More

கல்விகரங்கள்-படிப்பு கடனுதவி வருடாந்த அறிக்கை (March 7, 2023)

idaikkadu
Informed by : வே. செங்கோ
Contributed by : Sengo Vel
Card image cap

உயர்தர படிப்பு முடித்து மேல் படிப்பதற்காக வட்டி இல்லாத கடனுதவி திட்டம் 2007 ஆண்டிலிருந்து நடைமுறப்படுத்தி வருகின்றோம்.
இதன் மூலமாக இதுவரை 12 மாணவர்களுக்கு மொத்தம் ரூபா 2,174,313 படிப்பதற்காக் கடனுதவி செய்துள்ளோம். இந்த கடனுதவி பெற்ற பலர் இன்று தொழில் வாய்ப்பு பெற்று கடனை திரும்ப செலுத்தியுள்ளார்கள். இன்னும் பலருக்கு தொடர்ந்தும் உதவி செய்ய கூடிய நிலமையில் இருக்கின்றோம்.

இத்துடன் 2022 வரையான நிதி கணக்கு இணைக்கப்பட்டுள்ளது.

பி.கு: கடனுதவி தொடர்பான விண்ணப்பத்துக்கு கீழே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளவும்:
இடைக்காடு:
வ. சசிகுமார்
த. கிருபாகரன்
சு. செல்வகுமார்
வெளி நாடு:
வே.செங்கோ
இ. செல்வராஜ்
க. கனேஷமூர்த்தி.

More

செல்வன ஜனா ஜெகதீஸ்வரன் நெதர்லாந்து மறைவு (March 2, 2023)

idaikkadu
Informed by : ந.சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்பச
செல்வன ஜனா ஜெகதீஸ்வரன்
நெதர்லாந்து
இடைசக்காட்டைச் சேர்ந்த அமரர் தெய்வேந்திரன் அவர்களின் பேரன்
தோற்றம்/மறைவு
05/07/2006/-01/03/2023

செல்வன் ஜெனா ஜெகதீஸ்வரன்

நெதர்லாந்த் ராழ்ரயை (RAALTE) பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஜெனா ஜெகதீஸ்வரன் அவர்கள் 01/03/2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார், அன்னார் ஜெகதீஸ்வரன் (ஜெகன்) தர்சினி (சுசி) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலம் சென்ற நாகராசா, அன்னமலர் சிறீகாந்தன் சாந்தா ஆகியோரின் பாசமிகு பேரனும், ஜெனியின் பாசமிகு சகோதரனும் ஆவர், பிறேம் & தமிழினி (கனடா) பாசமிகு பெறாமகனும், செல்வன் & சினேக்கா (இங்கிலாந்த்) பாசமிகு மருமகனும், ராஜி & வாகா (இங்கிலாந்த்) அன்பு பெறாமகனுமாவார்.

மாயா, சாஜித், றேயா மற்றும் ரிசிதன் ஆகியோர்களின் உடன்பிறவா சகோததருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பின்னர் அறிவிக்கபடும்.

தகவல்- குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
ஜெகன் (தகப்பன்) 0031685662552
காந்தன் (தாத்தா) 0031644271642
செல்வன் (மாமா) 00447405035446
ராஜி (சித்தப்பா) 00447577888659.

More

மரண அறிவித்தல் (Feb. 26, 2023)

idaikkadu
Informed by : N.Swaminathan
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்கள் ஆறுமுகம் இராசம்மா அவர்களின் மகளும் நித்தியானந்தத்தின் பாசமிகு மனைவியும் சுதர்சனி, வர்ஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் செல்லபாக்கியம்(குணம்), பரமேஸ்வரி(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் 10.00 மணியளவில் இடம்பெறும்
தகவல்
குடும்பத்தினர்

More

திருமதி ஸ்ரீவிக்னேஸ் மகேந்திரராசா மணிவிழா (Feb. 20, 2023)

idaikkadu
Informed by : Sengo
Contributed by : Sengo Vel
Card image cap

யாழ் இடைக்காடு மகாவித்தியாலய ஆரம்பக்கல்விப்பிரிவிற்கான பகுதித்தலைவர் திருமதி ஸ்ரீவிக்னேஸ் மகேந்திரராசா அவர்களின் மணி விழா நிகழ்வுகள் இன்று பாடசாலையில் நடைபெற்றன

More

மரண அறிவித்தல் திருமதி கண்மணி வைரமுத்து (Feb. 14, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிதாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி கண்மணி வைரமுத்து
இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கண்மணி வைரமுத்து சற்று முன் இறைவனடி சேர்ந்தார்

அன்னார் அமரர் வைரமுத்து ஆசிரியரின் அன்பு மனைவியும் கதிர்காமநாதன் (வைரம்) அவர்களின் அன்புத் தாயாரும் ஆவர்
இறுதிக்கிரியைகள் இன்று 14.02.2023 செவ்வாய்க்கிழமை மு.ப.9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் .
ஓம் சாந்தி ஓம் சாந்தி

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி சுற்றுலா (Feb. 12, 2023)

idaikkadu
Informed by : முன்பள்ளி ஆசிரியர்கள்
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி
🏫அம்பாள் முன்பள்ளி 28.02.2023

💐 சுற்றுலா நிகழ்வு💐

- மாசி 2023 -

🔯புறப்படும் திகதி - 11/02/2023(சனிக்கிழமை )

📢புறப்படும் நேரம் - காலை 6.30

🚒புறப்படும் இடம் - இடைக்காடு மகாவித்தியாலய நுழைவாயில் முன் பக்கம்

🚩செல்லும் இடங்களும் உத்தேச நேரங்களும்

1) முன்பள்ளி - றீச்சா பயணம் >காலை6.30 -7.15am

2) 🚗றீச்சா பார்வை (சிறார்கள் மகிழகம்) [ 7.15 -11.30 am ]

3) றீச்சா - இயக்கச்சி உணவு அருந்தல் பயணம் [ 11.30 -12.00am ]

4) 🚚இயக்கச்சியில் உணவு அருந்தல் [ 12.00 -1.00pm ]

5) இயக்கச்சி உணவகம் - ஆனையிறவு பயணம் [ 1.00 - 1.15pm ]

6) 🚢ஆனையிறவு உப்பளம் பார்வை [ 1.15 - 2.00pm ]

7) ஆனையிறவு ,பரந்தன் ஊடாக - சங்கு பிட்டி பாலம் பயணம் [ 2.00 -2.30pm ]

8) சங்கு பிட்டி பாலம் பார்வை [ 2.30 -3.00 pm ]

10)சங்குபிட்டி பாலம் - பூநகரி மின் காற்றாலை பயணம் [3.15 -3.30 pm ]

09) 🌇பூநகரி மின் காற்றாலை பார்வை [3.30 - 4.15 pm ]

11) 🏠 பூநகரி - இடைக்காடு புவனேஸ்வரி அம்மன்முன் பள்ளி பயணம் [ 4.15 - 5.00 Pm ]

(இது உத்தேச நேரம் )

⭐றீச்சாவை தவிர மற்ற இடங்கள் பார்வை இடல் மட்டுமே.

🚉கட்டண விபரம்

🌺மேற்படி இடங்கள் சென்று வர
பஸ் கட்டணம் 40,000/=
☀வரும் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் அறவிடப்படும்
(உ+ம்) 50 சீற் ÷ 40000 = 800/=

☀5வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு றீச்சா நுழைவுக் கட்டணம் 300/=
(மற்றையவர்களுக்கு இலவசம்)

☀பொருளாதார இடரை கருத்தில் கொண்டு தவிர்க்க முடியாத காரணத்தால் அவரவர் தமது உணவு, பானங்களுக்கு தாமே பணம் செலுத்தி பெற்றுக் கெள்ளவும்.

☀வரும் சிறார்களுக்கு குடிநீர் வசதி, பணிஸ் என்பன வழங்கப்படும்.💦🍔

☀பெற்றோர்கள் வரும் ஒழுங்கில் ஆசனத்தில் அமரமுடியும்.

☀குறித்த நேரத்திற்க்கு பயணம் ஆரம்பிக்கப்படும் .

😥அதனால் ஏற்படும் அசெளகரியங்களுக்கு தாங்களே பொறுப்பாளிகள்.

☀மதிய உணவு (மரக்கறி) தேவைப் படுபவர்கள் முற்கூட்டியே அனுசா ரீச்சரிடம் பதிவு செய்யவும்.

🍴🍝 குறிப்பு -🎀 …

More

செல்வி தமிழ்ச்செல்வி இளையதம்பி இன்றுகாலை இறைவனடி சேர்ந்தார் (Feb. 10, 2023)

idaikkadu
Informed by : ந. சுவாமிநாதன்
Contributed by : Sengo Vel
Card image cap

இறுதிக் கிரியைகள் பற்றிய அறிவித்தல்
செல்வி தமிழ்ச்செல்வி இளையதம்பி
இன்றுகாலை இறைவனடி சேர்ந்த செல்வி தமிழ்ச்செல்வி இளையதம்பி (பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தெல்லிப்பழை பிரதேசச் செயலகம் ) அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று 10. 02.2023 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணியளவில் இடைக்காட்டில் நடைபெற்று இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

More

பொன்னம்மா மகாதேவா அவர்கள் இயற்கை எய்தினார் (Jan. 31, 2023)

idaikkadu
Informed by : முரளி மகாதேவார
Contributed by : Sengo Vel
Card image cap

எங்கள் அன்புக்குரிய அம்மா பொன்னம்மா மகாதேவா அவர்கள் 30-01-2023 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார் அன்னார், பொன்னையா மகாதேவா(ஆங்கிலச் ஆசிரியரின்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
இராசம்மா, காலஞ்சென்றவர்களான,சிதம்பரப்பிள்ளை , கனகசபை ,வடிவேலு ,சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அனுசரட்ணம் ,செல்வரத்தினம் ,மகேந்திரன் ,அன்னரட்ணம் , காலஞ்சென்ற கமலம் ஆகியோரின் மைத்துனியும்,
மாலதி,பபி,பகவதி , முரளி ,தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜன்,சிவகுமார் ,கோபிதா , வினோதினி ,காலம் சென்ற வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சிவசாயந் ,துவா,கிரி,நர்மதா ,நிரு,அமிரா,பிரவின்,துகிர்,சுபன் ,சிவானி,ஆதனா ஆகியோரின் பேத்தியும். சிந்தனா,திகளோன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமை பி. ப 6 மணி முதல் பி.ப 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு மறுதினம் இறுதிக்கிரியை 06-02-2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
LOTUS Funeral and Cremation Centre
121 Cityview Drive Toronto
ON M9W 5A8
தொடர்புகளுக்கு
மாலதி (இலங்கை) 94 77 672 4415
பகவதி (Canada) 416 292 0400
முரளி (Canada) 416 500 5300
தர்சன் (Canada) 416 903 0425
சிவசயந் (Canada) 437 263 4402

More

திரு .கந்தையா இராசலிங்கம் (கனடா) காலமானார் (Jan. 26, 2023)

idaikkadu
Informed by : திரு.சபேசன் இரசாலிங்கம்.
Contributed by : Sengo Vel
Card image cap

அத்தியடியைப் பிறப்பிடமாகவும் இடைக்காடு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இராசலிங்கம் சற்றுமுன்னர் கனடாவில் இறைவனடி சேர்ந்து விட்டார்.
அன்னார் சத்தியபாமாவின் அன்பு துணைவரும் சபேசன், மாதவன், கலைவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் வெளியிடப்படும்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!
Funeral Information !
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham, ON

Sunday, Jan 29th, 2023
From 2pm to 4pm

Service: Sunday, Jan 29th, 2023
From 4pm to 5.30pm

Followed by cremation at 6pm at Highland Hills Crematorium located at 12492 Woodbine Avenue , Gormley, ON.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

More

கோபிநாத் பொன்னாடை (Jan. 17, 2023)

idaikkadu
Informed by : மகேசன்
Contributed by : Sengo Vel
Card image cap

திரு. சி.நல்ல தம்பி அவர்கள் நீயா் நானா புகழ் திரு் கோபிநாத் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்

More

இடைக்காடு மஹா வித்தியாலயம் புதிய அதிபர் நியமனம். (Jan. 11, 2023)

idaikkadu
Informed by : பழைய மாணவர் சங்கம்.
Contributed by : Sengo Vel
Card image cap

யா/இடைக்காடு மஹாவித்தியலயத்திற்கு புதிய அதிபராக திரு. குமாரசாமி அகிலன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை வரவேற்கும் நிகழ்வு 19.12.2022 திங்கட்கிழமை காலை 7:30 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வினை பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஒழுங்கு படுத்தி நெறிப்படுத்தியிருந்தது.
பாடசாலை அபிவிருத்திச்சங்கம் மற்றும் பெற்றோர்கள், முன்னை நாள் அதிபர்கள், வெளி நாட்டு வாழ் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

வரவேற்பு உரையினை தொடர்ந்து, பாடசாலையின் பிரதி அதிபர், திருமதி க. லலீசன், ஓய்வு நிலை கல்வி பணிப்பாளர் திரு க. முருகவேல், எமது பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான திரு. அ. அருந்தவனேசன், திரு. கு. வாகீசன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. நா. சுவாமினாதன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் திரு. ச. ஶ்ரீபதி, பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு. கஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

இறுதியாக புதிய அதிபரின் ஆரம்ப உரையுடன் நிகழ்வு காலை 8:30 மணிக்கு நிறைவடைந்தது.

More

தைப்பொங்கல் விழா 2023 -IVWA (Jan. 5, 2023)

idaikkadu
Informed by : IVWA
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தைப்பொங்கல் விழாவானது இம்முறை தை மாதம் 07ம் திகதி சனிக்கிழமை (07/01/2023) பி.ப 2:30 மணி தொடக்கம் பி.ப. 10.00 மணி வரை நடைபெறவுள்ளது. அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

Date: 07 January 2023 Saturday
Time: 02.30 pm – 10.00 pm
Location: South Ruislip Community Association
Deane Park Hall
Long Drive
Ruislip
Middlesex
HA4 OHS

கட்டணம்
தனி நபர் £20
குடும்பம் £35

தொடர்புகட்கு
கேதீஸ் 07961929197
சுகுணா 07475747322
வெற்றி 07988620110

இடைக்காடு வளலாய் நலன்புரிச்சங்கம் UK

More

இடைக்காடு மக்களுக்கு சில அன்பளிப்பு (Dec. 19, 2022)

idaikkadu
Informed by : ந. உதயகுமார்
Contributed by : Elango veluppillai
Card image cap

புவனேஸ்வரி முன் பள்ளிக்கு பிள்ளை திவானியின்19வயது பிறந்த நாள் நினைவாக சில அன்பளிப்பு
மாணிக்க இடைக்காடர் சனசமூக நிலையத்துக்கு சில பெறுமதிமிக்க நூல் அன்பளிப்பு

எம் ஊரில் எம் பிள்ளைகளுக்கான அடையாள நிலம் (திடல்)

கலைமகள் சன சமூக நிலையத்தின் புலம் பெயர் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் வழங்கிய ஒரு தொகை பணம் நிலையத்தில் கையளிக்கப்பட்ட தருணமதில்!

More

மரண அறிவித்தல் (Dec. 14, 2022)

idaikkadu
Informed by : Keathewaran
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

நாகலிங்கம் கிருஸ்ணானந்தன்
மலர்வு -14.11.1946 உதிர்வு -14.12.2022

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கிருஸ்ணானந்தன் இன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற நாகலிங்கம் - தங்கரத்தினம் தம்பதிகளின் பாசமிகு புதல்வனும் காலஞ்சென்ற கந்தசாமி - மாணிக்கம் தம்பதிகளின் மருமகனும் சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும் அனுசா, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,நாகீசன் அவர்களின் சித்தப்பாவும், ரதீஸ்வரன் ,கெங்கா,சித்திரா அவர்களின் பாசமிகு மாமானாரும் காலஞ்சென்ற விவேகானந்தனின் அன்பு சகோதரனும் இரத்தினபூபதியின் மைத்துனரும் , திவாகர், திவ்வியா, கிருசாந், கிருத்திகா ,கிஷாந், அபிராமி ,விஷாந்த்,திவியா ஆகியோரின் பேரனும் இதழ்யா ,அகனிதன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார் .

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (18.12.2022)அன்று முற்பகல் 9.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக 11.00மணியளவில் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் .
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கேதீஸ் (மகன்)- +447961929197
ரவி (மருமகன்) -0774195961

More

மரண அறிவித்தல் (Dec. 4, 2022)

idaikkadu
Informed by : முத்துராஜா
Contributed by : Elango veluppillai
Card image cap

யாழ். அச்சுவேலி தம்பாளையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா அற்புதராஜா அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா, இரத்தினபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,சத்தியதேவி அவர்களின் அன்புக் கணவரும்,உதயகரன்(கனடா), அஜந்தகரன்(லண்டன்), மதிகரன்(ஓமந்தை), பிரதாஷினி(வத்தளை), ஜனார்த்தனி(வவுனியா), ரோசிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்ற திருநாவுக்கரசு(குட்டி), முத்துராஜா(கனடா), காலஞ்சென்ற யோகேஷ்வரன்(அல்வாய்), விக்னேஷ்வரன்(கனடா), மீனலோஜினி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,பத்மநாதன், மாலதி(கனடா), காலஞ்சென்ற இரத்தினகுமாரி(அல்வாய்), பத்மினி(உடுப்பிட்டி), வைரவநாதன்(அகத்தி, கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நிஷாந்தினி(கனடா), வாசுகி(லண்டன்), சுபாஜினி(ஓமந்தை), விஜயபாலேந்திரன்(வத்தளை), சுரேஷ்குமார்(வவுனியா), அர்ஜனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,டயானா, ராகிலா, கார்த்திகா, சயந்தன், சஞ்சிகா, கவிநிலானி, வித்தியா, திபாகரன், ஜனசிகா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,தனுஷா, வனஜா, கருணாகரன், அனுஷா, கவித்தியா, கரேந்திரகிருஷ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,ரிதீஸ், நீல், ஆருஷ், அஹானா, ஹரின், தேஷ்னி, கபினேஷ், ஜெருஷா ஒலினா, ஜோசுவா செனோன், ஜோயல் அரோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 11.00 மணியளவில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
முத்துராஜா - சகோதரன்Mobile : +16472622079 சத்தியதேவி - மனைவிMobile : +94776708451 மதிகரன் - மகன்Mobile : +94761043132 கரன் - மகன்Mobile : +164789663

More

மரண அறிவித்தல் (Dec. 3, 2022)

idaikkadu
Informed by : Ramakumar
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

மரண அறிவித்தல்

அமரர் திரு பொன்னையா பாலசுப்பிரமணியம்
இடைக்காடு கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு பொன்னையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 01.12.2022 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திலகவதி அவர்களின் அன்புக்கணவரும் ராமகுமார் (கொழும்பு) சசிகலா(டென்மார்க்) ரதிகலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 05.12.2022 திங்களன்று காலை 8.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 05.12.2022 திங்கட்கிழமை பி.ப. 5.00 மணியளவில் தெகிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
ராமகுமார்: +94 777766077

More

இ. ம. வி ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தனியான நூலகம் ஒன்று திரு திருமதி ஸ்ரீசத்தியானந்தம் அவர்களினால் திறந்து வைக்கப்படுள்ளது (Dec. 1, 2022)

idaikkadu
Informed by : மாஸ்டர் சுதாஸ்ர் இ. ம. வி
Contributed by : Elango veluppillai
Card image cap

30.11.2022 அன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கு ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தனியான நூலகம் ஒன்று திரு திருமதி ஸ்ரீசத்தியானந்தம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.எமது பாடசாலையின் பிரதி முதல்வர் திருமதி கவிதா லலீசன் அவர்களின் எண்ணக்கருவிலே ஆரம்பப்பிரிவு ஆசிரியர்களின் முயற்சியினால் ,திரு திருமதிஸ்ரீ சத்தியானந்தம் (சுவிஸ்) அவர்களின் முழுமையான பங்களிப்புடன் சிறுவர்களுக்கான நூல்களை மட்டும் உள்ளடக்கியுள்ளது.இதுவரை காலமும் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் பாதையைக் கடந்து நூலகத்திற்கு செல்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். எதிர்காலத்தில் ஆரம்பப்பி்ரிவு மாணவர்களின் வாசிப்புத்திறன் அதிகரிக்கும்.இதனால் கற்றல்திறன் அதிகரிக்கும்.இவ் உன்னதமான பணிக்கு நூல்களை வாங்கி அன்பளிப்பு செய்ததுடன்.இந்நூல் நிலையத்தை வர்ணம் தீட்டி அழகுபடுத்தும் பொறுப்பையும் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டமை சிறப்பு.இந்நிகழ்வில் பழையமாணவர்கள் திரு ஆறுமுகம் சந்திரகுமார் ,திரு வேலுப்பிள்ளை செங்கோ, திருமதி பாமதி வைரவநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தகவல் மாஸ்டர் சுதாஸ்ர்

More

க.பொ.த (சா/த) பரீட்சை 2021 எமது பாடசாலையின் சிறந்த பெறுபேறுகள் (Nov. 28, 2022)

idaikkadu
Informed by : Idaikkadu Face book page
Contributed by : Sengo Vel

S.Aarnikan 9A

V.Saranja 9 A

S.Jathusha 9A

A.Mithunan 6A3B

T.Apinaja 4A2B 2C S

S.Vinoja 4A 5C

K.Thishanuka 3A 4B 2C

S.Mert Dinoshija 3A 3B C 2S

N.Thathursha 2A 3 B.3C S

J.Amshaviruthan A 2B 4C 2S

T.Tharshna A 3B 5S

R.Lanuja A 2B 3C 2S

S.Mahisha A 3B C 3S
G.Jathurshikan A 5B 2C S
T.Kishani A B 2C 3S
T.NIKJAN A 3C 3S
S.SUVARNA B 2C 3S
NN.SABESAN B 5C 2S
R.KABILISHAN 2B 4C 2S
R.RAMIJA 2B 5C S
Y.KIRUTHTHIKAN B 4C 4S
J.JNUSHAN B 2C 3S
K.SALINY 3B C 5S
NN.ABINATH 6C 2S
J.LAXIHA 4C 4S
N.SHAHANA 4C 2S
தகவல்
Idaikkadu Maha Vidyalayam முகநூல்.

More

மழை காலத்தில் இடைக்காடு மகா வித்தியாலத்தின் நிலைமை (Nov. 22, 2022)

idaikkadu
Informed by : ஜீவா மாஸ்டர் (இ. ம. வி )
Contributed by : Elango veluppillai
Card image cap

யா/இடைக்காடு மகா வித்தியாலய மழை காலங்களில் பாடசாலை மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் ஏற்படும் இடர்பாடுகள்
1 வெள்ளம் சூழ்ந்த வகுப்பறைச் சூழல்
2 மின்னொளி அற்ற இருண்ட வகுப்பறைகள்

இவ் இடர்பாடுகளை நலன்விரும்பிகள் முன்வந்து சீர் செய்வதன் மூலம் கற்றலுக்கான சூழலை மேலும் அதிகரிப்பதுடன் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை விரைவாக சீரமைத்து தருமாறு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கின்றது.
தகவல் ஜீவா மாஸ்டர்

More

திருமதி இராசம்மா முருகையா இறைபதம். (Nov. 3, 2022)

idaikkadu
Informed by : Veluppillai Sengo
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா முருகையா இன்று இறைபதம் அடந்து விட்டார்.

அன்னார் காலம் சென்ற முருகையா செல்வமுத்துவின் அன்பு மனைவியும், காலம் சென்ற செல்வராசன், திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம் (இடைக்காடு), திருமதி செல்வமலர் நந்தகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்பு தாயாருமாவர்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் Nov 4 2022 அன்று மதியம் இடைக்காடு திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம் வீட்டில் செய்யப்பட்டு இடைக்காடு இந்து மயானத்தில் தகநம் செய்யப்படும்.

Theivamalar 94 77-059-7513

More

நீத்தார் நினைவு - சின்னத்தம்பி தருமராசா, இடைக்காடு (Oct. 14, 2022)

idaikkadu
Informed by : கந்தவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

நீத்தார் நினைவு - சின்னத்தம்பி தருமராசா, இடைக்காடு

இப்புவியில் பிறந்த ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் போய்த்தானே ஆகவேண்டும். எம் வாழ்வு நிரந்தரமானதல்ல. ஆக மிஞ்சி மிஞ்சிப்போனால் நூறு ஆண்டுகள். வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ? எம் வாழ்க்கையின் தத்துவத்தை நான்கு வரியில் சொல்லிச் சென்ற கண்ணதாசனின் வரிகள் இவை. மற்ற உயிர்களைவிட கடவுள் மனிதனுக்குக்கொடுத்த பாச உணர்வு, நீ இன்றி நான் வாழமுடியாது என்னுமளவுக்கு ஒரு சிலரை பாசத்தால் கட்டிப்போட்டுவிடுகின்றது.

உண்மைதான். எம் இரத்த உறவுகளைவிட ஏதோ ஒருவகையில் சில நண்பர்களை எமக்குப் பிடித்து விடுகின்றது. சிலருடன் ஏற்படும் நட்பு சிலகாலத்தில் அறுந்துவிடுகின்றது. சிலருடன் ஏற்படும் நட்பு உயிருள்ளவரை உயிர் வாழ்வது ஆச்சரியம்தான்

அந்தவகையில் அண்மையில் இவ்வுலகைவிட்டுப்பிரிந்த சின்னத்தம்பி தருமராசா இளமை தொடங்கி இன்று வரை என் ஆருயிர் நண்பனாய் வாழ்ந்தவர். ஒரே ஊர், ஒரே பாசாலை, ஒரே வகுப்பு, ஒரே வீதி, ஒரே மனப்பாங்கு, மாறுபாடற்ற மசிந்தனை. பள்ளிப்படிப்பை பத்தாம் ஆண்டுவரை ஒன்றாக கல்விகற்று வெளியேறினோம்.. எம்மைத் தோட்டம் வரவேற்றது. எம் முயற்சிக்கு தீனிபோட எம்ஊர் தோட்ட நிலம் போதவில்லை. வன்னிமண் விசுவமடு எம்மை வரவேற்றது. வாலிப மிடுக்கு வன்ன்னி மண்ணில் களமாடியது. உளைப்புக்கேற்ற பலன் நிறையவே கிடைத்தது.

காலம் ஓடியது. எமக்கான வாழ்க்கைத்துணயையும் தேடிக்கொன்டோம். இல்லறத்தின் விளச்சலாக கையில் குழந்தைகள் தவழ்ந்தனர். இன்பமும் துன்பமும் மாறி மாறி வதுபோயின. நாளுக்குநாள் நாட்டு நிலைமை மோசடைந்து வந்தது வாழ்வுதேடி வன்னியில் வாழ்ந்துவந்த என் உயிருக்குயிரான தம்பியர் இருவரை ஒரேநாளில் இலங்கை இனவெறி இராணுவம் பலிகொண்டது. நண்பனின் மூத்த மகனை.வெறிகொண்ட உள்ளூர் இனவெறிக்கும்பல் பலிகொன்டது. இழப்பு என் நண்பனுக்கு பட்டுமல்ல எம் ஊருக்கே கல்வி ஒளி பாச்சக் காத்திருந்த ஆனந்தனின் இழப்பு எம் ஊருக்கும் கல்வி உலகத்துக்கும்தான்.

கால ஓட்டம் பல மாறுதல்களை செய்து விடுகின்றது. எம் நாட்டில் நிம்மதியாக வாழமுடியாத நிலை. பலரும் வாழ்வுதேடி அந்நிய தேசம் படைஎடுத்தனர். நண்பனின் பிள்ளைகளும் வாழ்வுதேடி அந்நிய மண்ணில் குடியேறினர். நானும் என் பிள்ளைகளுடன் கனடிய மண்ணில். நான் தாயகம் வரும்போதெல்லம் யாரைச் சந்திக்காது விட்டாலும் நண்பன் தருமுவை தவறாது சந்தித்து அளவளாவுவதில் ஓர் மன நிறைவு.

கடந்தவருடம் ஊருக்குச் சென்றிருந்தபோது அவரைச் சந்தித்தேன். உடல் பலவீபனமுற்றிருந்தது. இதயம் பாதிக்கப்பட்டிருந்தது வழமையான தோட்டச் செய்கயை செய்யமுடியாமலிருந்தார். எனினும் மனைவிக்கு வேண்டிய அன்றாட வேலைகளை செய்துகொண்டிருந்தார். ஜேர்மனியிலும் கனடாவிலும் வாழும் பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் …

More

மரண அறிவித்தல் (Oct. 13, 2022)

idaikkadu
Informed by : செ. நாகேந்திரன்
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்

More

மரண அறிவித்தல் (Oct. 6, 2022)

idaikkadu
Informed by : பா. குணாகரன்
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
பிறப்பு- 1947.11.12
இறப்பு- 2022.10.06
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பாலகிருஷ்ணன் செல்வபாக்கியம் இன்று தனது இல்லத்தில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்ற அமரர்கள் ஆறுமுகம் இராசம்மா ஆகியோரின் மூத்த மகளும், பாலகிருஷ்ணனின் பாசமிகு மனைவியும் அனுஷா (கனடா), குணாகரன் (அதிபர்- நவக்கிரி. அ.மி.த.க.பாடசாலை ) ஆகியோரின் அன்பு தாயாரும், சுதர்சன் (கனடா),நாகசொரூபி ஆகியோரின் மாமியாரும், பரமேஸ்வரி, பாஸ்கரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும் , தர்சன், சயீனா(கனடா) ,றேணுகாந், கிருஷன்,கிருத்திகன்(இடைக்காடு.ம.வி)ஆகியோரின் பேர்த்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 07.10.2022 புதியபூமியிலுள்ள அவரது மகன் இல்லத்தில் 11.00 மணியளவில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இடைக்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்
பா.குணாகரன் (மகன்) 94779112984
சு. அனுஷா. 437 214 4525/416 243 1948

More

திரு சின்னத்தம்பி தருமராசா (Oct. 1, 2022)

idaikkadu
Informed by : Kavitha Sivaruban
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி தருமராசா
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்தம்பி தருமராசா அவர்கள் 01.10.2022 அன்று இடைக்காட்டில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி வள்ளியம்மை அவர்களின் அன்பு மகனும் கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும் ஜீவபாஸ்கரி அவர்களின் பாசமிகு கணவரும் ஆவார்.
வஜிதா, சிவரூபன், சிவானந்தம்(அமரர்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,பரமானந்தம், கவிதா அவர்களின் அன்பு மாமனாரும்,சஞ்சய், சிந்து, கயனன், பிரணவன், தாரகி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
சத்தியபாமா, சரஸ்வதி, இதயகுமார், சரோஜா, காந்திமதி ஆகியோரின் சகோதரரும் சிவராசா காலம் சென்ற கந்தசாமி, சிவாஸ்வரி சபாரத்தினம் கனகரத்தினம் காலம் சென்றவர்களான இராசதுரை அன்னலட்சுமி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
மகள் 011 4972 74703588
மகன். 416 438 7350
Cell 437 213 7845

More

நன்றி நவிலல்.💐 (Sept. 20, 2022)

idaikkadu
Informed by : முன் பள்ளிச்சமூகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

நன்றி நவிலல்.💐

முன்பள்ளி மாணவர்களின் தேவை கருதி முன் பள்ளிப் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்ட அன்பளிப்புக்களாக..

🌷திரு.திருமதி கோகிலச்செல்வன் தம்பதிகளால் 2000/=பெறுமதியான "Pen drive" அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதுடன்.

🌷திரு.திருமதி செந்தூரன் தம்பதிகளால் சுமார் 3000/=
= க்கு மேற்பட்ட பெறுமதியான "Mouth ocan" அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வளலாய் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் அனுசரணையில் திரு வி.யோகநாதன் (வான் யோகண்ணை)என்பவரால் சுமார் 2500/= பெறுமதியான மாணவருக்கான வரைதல் தாள்கள்.Water paint, Brush. என்பன முன் பள்ளியில் கையளிக்கப்பட்டன.

இவர்களுக்கு முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி
🙏🙏🙏

இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-

💐நன்றி நவிலல்.💐

🍁முன் பள்ளிக்கான நீர்க்குழாய் இணைப்பு வேலைகளினை மேற்கொள்வதற்கான பொருட்களினை திரு.திருமதி கணேசலிங்கம் குடும்பத்தினர்(S.V.K. ELECTRICALS & FITTING) நிறுவனத்தினர்)
அன்பளிப்புச் செய்துள்ளனர் (பெறுமதி 68560/=)இவர்களுக்கு!

முன்பள்ளி சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இவர்களே முன் பள்ளிக்கான உள்ளக மின் இணைப்புக்கான பொருட்களையும் தமது செலவில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

🌺மேலும் நீர் குழாய் அமைப்பதற்கான கிடங்குவெட்டல்,நீர்க்குழாய்பொருத்தல் போன்ற பணிகளுக்கு உதவிய . நலன் விரும்பிகள் ,நிர்வாக சபை உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மேலும்
நீர்குழாய் பொருத்துனர்களாக செயற்பட்ட திரு ந.பாஸ்கரன்,திரு க.சிகாதரன், திரு த.தயாபரன் ஆகியோர்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.

இவர்களுக்கு முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி
🙏🙏🙏

இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-
நீர்க்குழாய் அமைத்தமைக்கான கூலி 182'×60=10920/=

மேற்படி கூலியாக வழங்கப்பட்ட பணத்தினை மீண்டும் முன் பள்ளிக்கு அன்பளிப்பாக திரு ந.பாஸ்கரன்,திரு க.சிகாதரன்,திரு த.தயாபரன் ஆகியோர் இணைந்து வழங்கியுள்ளனர்.அவர்களுக்கு மீண்டும் எமதுமனமார்ந்த நன்றிகள்.

More

இடைக்காடு மகா வித்தியாலம் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளல் (Sept. 14, 2022)

idaikkadu
Informed by : ஜீவா மாஸ்டர் (இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலம் ஆரம்பப்பிரிவு மாணவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளல்

More

Idaikkadu MV A/L Results (Sept. 2, 2022)

idaikkadu
Informed by : Swaminathan Thileepan
Contributed by : Sengo Vel
Card image cap

Physical Science:
S. Sopithan 3A
K.Sayanthan B2C

Bio Science:
N.Venuja 2AB
S.Kokulapalani 2BC
S.Kayaruban 3C
J.Niluxshiya 2CS
S.Panuvanthy C2S
S.Kajarsan 3S

General:
T. Baveen BCS

Arts:
S.Lathanika 2AB, S. Laxhika A2B, M. Vithusha 2AC, M. Piruntha 2AB, T. Diluxana A2B, S.Vinothiny ABC, N. Mathushana 3B, M. Mathusha A2C, R. Jathusa A2C, J. Roobika 2BC, S. Pakshana 1AC

More

இடைக்காடு மகா வித்யாலாய தரம் 5 புலமை பரிசில் வழங்கல் (Aug. 8, 2022)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் முகமாக அமரர் வேலுப்பிள்ளை சுவாமிநாதன் அவர்களின் நினைவாக மகன் அருள்வாசன் சுவாமிநாதன் அவர்களால் சேமிப்பு சான்றிதழ்கள் வழங்கி வைகஂகப்பட்டது.

More

கண்ணீர் அஞ்சலி (Aug. 4, 2022)

idaikkadu
Informed by : குடும்பத்தினர்
Contributed by : Elango veluppillai
Card image cap

கண்ணீர் அஞ்சலி

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன் பள்ளி (July 11, 2022)

idaikkadu
Informed by : செயலாளர் -
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன் பள்ளி

📠 நிர்வாகக் கூட்டம்

- 2022 ஆனி -

இடம் - புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி மண்டபம்.

# திகதி - 12/06/2022(ஞாயிற்றுக் கிழமை)

நேரம் - பி.ப2.30 -பி.ப3.30 வரை

🌺விடயம் 🌺

1) நடை பெற்ற கலைவிழா பற்றியது.

2) கலை விழாச் செலவு விபரம் மற்றும் ஏனைய அபிவிருத்தி தொடர்பாக செலவாகும் நிதி நிலமை தொடர்பாக கலந்துரையாடல்.

3) மாதர் சங்கத்திற்கும் முன் பள்ளிக்கும் இடையிலான எல்லைக்கு அத்திவாரத்துடன் கம்பி வலை வேலி அமைத்தல்.

4)சிறு திருத்த வேலைகள் செய்தல். மலசலகூட பாதுகாப்பு மதிற் சுவர் அமைத்தல்.(சிறுவர் பாது காப்பை உறுதிப் படுத்துவதற்காக)

5)சிறுவர் அசையா விளையாட்டு உபகரணங்களை தற்காலிகமாக இடம் மாற்றல்.

6)நீர்க்குழாய் இணைப்பு வேலைகள் .

7) முன் பள்ளியை பசுமைப் படுத்தல்திட்டம்.(மரக் கன்றுகள் நடல்.

8) முன் பள்ளிக்கான முகாமைத்துவ அணி தொடர்பாக கலந்துரையாடல்.

9)அரசியல் கட்சியினர் (அங்கயன் அணி சார்பாக திரு த.ஜீவாகரன் அவர்கள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்தல்.

10)ஏனைய விடயங்கள்

👉 குறிப்பு - அனைத்து அங்கத்தவர்களும் தவறாது கலந்து கொள்ளவும்.


நன்றி🙏

- செயலாளர் -

நன்றி நவிலல்🙏

🔈அமரர்களான நாகலிங்கம் - தங்கரத்தினம் ஞாபகார்த்தமாக அவர்களது பேரன் குடும்பம் திரு.திருமதி கேதீஸ்வரன் (லண்டன்)அவர்களால் வழங்கப்பட்ட பெறுமதியான கற்றல் சாதனம்(BOX SET) மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்பதுடன்.நாமும் பெருமகிழ்வடைவதுடன். முன் பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

🌷நாட்டின் பேரிடர் நிலமையிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் குறித்த சாதனத்தை முன்பள்ளி சமூகத்திடம் கையளித்த திரு திருமதி சரவணபவான் தம்பதிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
🌴முன்பள்ளியை அழகும் பசுமையாக்கும் திட்டத்தின் அடிப்படையில்
ஆலோசனை , நிதி அனுசரணை வழங்கிக் கொண்டிருக்கும் இடைக்காடு நம்பிக்கை நிதியத்தினருக்கும் எமது முன்பள்ளி சமூகத்தின் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

நன்றி
🙏🙏🙏

இவ்வண்ணம்
-முன் பள்ளிச்சமூகம்-

More

மணிவிழா காணும் எங்கள் அதிபர் வாகீசன் குழந்தைவேலு (June 22, 2022)

idaikkadu
Informed by : செல்வி. க. சுஜிதா யா/ இடைக்காடு ம.வி.
Contributed by : Elango veluppillai

மணிவிழா காணும் எங்கள் அதிபர் வாகீசன் குழந்தைவேலு அவர்களுக்கு தரம் 11 ல் கல்வி பயிலும் மாணவி க. சுகிதா அவர்களின் வாழ்த்து மடல்.

அறிவார்ந்த அதிமேதகு ஆசானே ....
ஆதிபரன் அருளாற் கிடைத்த அதிபரே .....
இதயமுருகி, இடைவிடாது, இனிதாக....
ஈகைதனைச் சொரிகின்ற இங்கிதரே ....
உன்னதராம் உம் பிள்ளைகள் நாம்,
ஊக்கம் தளரா உறுதியுடன் கற்போம் ....
எங்கும், எதிலும், எப்போதுமே தோல்வியுறாமல்,
ஏற்றமிகு வாழ்நெறியில் நிமிர்ந்தே நிற்போம் ...
ஜயனே .. ஜயமேதுமில்லை இதில் ...
ஒப்பிலாப் பணிதனை ஒழுங்கமைத்த பின்னர்,
ஓய்வு நிலை பெறும் தாங்கள்,
ஒளவையின் அருந் தமிழ் வீச்சாய்,
எஃகதன் வலிமையோடு,
என்றென்றும் வாழியவே!

சுபம்.

அகர வரிசையில் அணிசெய்து
பகரவென, பைந்தமிழ் மலர் கொய்து
தொடுத்திருக்கும் –
-பணிநிறை நயப்புப் பாச்சரமிதனைப் பணிவோடு
மணிவிழா நாயகருக்கு மனமுவந்து அணிவிப்பவர்;

தரம் 11 மாணவி
செல்வி. க. சுஜிதா
23 – 04 – 2022. யா/ இடைக்காடு ம.வி.

More

இடைக்காடு 1988/91 பழையமாணவர் நிதி வழங்கல் (June 10, 2022)

idaikkadu
Informed by : பவன்
Contributed by : Sengo Vel

இடைக்காடு மழலைகளின் நிகழ்வுகள் (May 18, 2022)

idaikkadu
Informed by : இடைக்காடு முன் பள்ளி நிர்வாகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

💐மழலைகளின் கலைநிகழ்வும் பரிசளிப்பு விழாவும் - 2022 (வைகாசி )🌷

மேற்படி தினத்திற்க்கு தாமாக முன்வந்து உதவிய

👫திரு திருமதி - சிறீ சத்தியானந்தம் (சுவிஸ்)

அவர்கள் 40 முன்பள்ளி மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்கியதுடன்.கடந்த வருடம் (2021) சிறார்களுக்கான
60 ,000/= பெறுமதியான கதிரை,மேசைகளை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

💁திரு திருமதி - முத்துலட்சுமி சிறீஸ்கந்தராஜா (ஓய்வு பெற்ற ஆசிரியர்) இடைக்காடு -25000 ரூபாவினை முன் பள்ளி வளர்ச்சிக்கென பெருளாளரிடம் கையளித்திருந்தார்.

👱திரு இளையதம்பி மகேசன் அவர்கள் ஊடாக அவரது சகேதரர் லண்டனை சேர்ந்த இளையதம்பி செல்வகுமாரன் என்பவர் மறைந்த பெற்றோர்களான அமரர் சுவாமிநாதர் இளையதம்பி நினைவாக
35800/=பெறுமதியான 25 செட் சிறுவர்களுக்கான கெளரவிப்பு சீருடை மற்றும் அதனை பாதுகாத்து வைப்பதற்கான பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றினையும் சேர்த்து கடந்த வருடம் முன் பள்ளிக்கு கையளித்தனர்.

🌺நாட்டின் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பயன் படுத்த முடியாமையால் போக அதனை 2022 பரிசுத்தின விழாவில் முதன் முதலாக பயன் படுத்தப்பட்டது.

🍂மேற்படி நன்கொடைகளை கொடுத்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் முன் பள்ளி சமூகம் நன்றிகளை தெரிவிப்பதுடன்.

👉அவர்களும் அவர்களது உறவுகளும் ஆரோக்கியமாகவும், சகல செளபாக்கியதுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பாராக!

-நன்றி-

More

நூல் வெளியீட்டு விழா (April 23, 2022)

idaikkadu
Informed by : இடைக்காடர் ஈஸ்வரன்
Contributed by : Elango veluppillai
Card image cap

நூல் வெளியீட்டு விழா

More

புத்தக விமர்சனமும் கலந்துரையாடலும் (March 11, 2022)

idaikkadu
Informed by : webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

எமதூர் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியுடைய இரு புத்தகங்கள் சென்னை புத்தக விழாவில் வெளியிடப்பட்டது.

இடைக்காடு கலை இலக்கிய மன்றம் சார்பில் ஒரு கலந்துரையாடல் நாளை (பங்குனி 12) மாலை 3:00மணிக்கு கந்தசாமி அறப்பணி நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் வருகைதந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன்முன்பள்ளியின் வளர்ச்சிக்காக புலம் பெயர் வாழ் எம்மவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பு மூலம் பல அபிவிருத்தி (Feb. 9, 2022)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியின் வளர்ச்சிக்காக புலம் பெயர் வாழ் எம்மவர்கள் வழங்கிய நிதி அன்பளிப்பு மூலம் பல அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை ஒளிப் படங்கள் மூலம் காணலாம். மழலைச் செல்வங்கள் மிகவும் உற்சாகத்துடன் தமது கற்றலை பெறுவதுடன் , சமூகம் சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான பயிற்சியையும் ( சந்தை ) பெற்று வருவதனையும், அங்கு பணிபுரியும் அற்பணிப்பான ஆசிரியப் பெண்மணிகளும், அதன் நிதி ஆளுகைக்குழுவின் அற்பணிப்பான செயல்பாட்டினாலும் முன்பள்ளியானது மக்களின் நன் மதிப்பினைப் பெற்றுள்ளது. அதிக அளவிலான பிள்ளைகள் இணைந்து கற்றலைப் பெற்றுவருகின்றனர். இதற்கு நிதி வழங்கிய அத்துணை அன்புள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள். புலம் பெயர் தேசங்களில் எம்மவர்கள் பல நூறு இருந்த போதிலும் ஒரு சில அன்பர்கள் மட்டுமே இவ்வாறான செயல் பாடுகளுக்கு தமது பங்களிப்பினை நல்கி வருகின்றனர். இதுவோர் வருந்தத்தக்க விடயமாகும். எல்லோரும் தமது பங்களிப்பிணை நல்குவார்களேயானால் மிகச் சிறப்பான பல்வேறு செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இனி வருங்காலங்களிலாவது எல்லோருடைய பங்களிப்பினை எதிர் பார்க்கிறோம்.
நிதிவழங்கிய அன்பர்களுக்கான, நிதி ஆளுகைக்குழுவின் பற்றுச் சிட்டைகள் தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. Covid – 19 காரணமாக பற்றுச் சிட்டைகளை தற்போது நேரில் வழங்க முடியாத நிலையில் உள்ளோம் என்பதனை மிக்க மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது உரியவர்களிடம் பற்றுச் சிட்டைகள் வழங்கப்படும்.
மீண்டும் நிதி வழங்கிய அத்துணை அன்புள்ளங்களுக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒற்றுமையே பலம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

வே. இளங்கோ
நிதி ஆளுகைக் குழு சார்பாக.

More

இடைக்காடு சாமித்திடல் இந்து மயானம் புனமைப்பு (Jan. 26, 2022)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு சாமித்திடல் இந்து மயானம் புனமைப்பு
இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கத்தின் முயற்சியின் பயனாக, சாமித்திடல் இந்து மயானத்தை புனரமைப்பதற்கும், பராமரிப்பதற்கும், அச்சுவேலி பிரதேசிய சபையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிதாக அமைக்கப்பட்ட இடைக்காடு சாமித்திடல் மயான அபிவிருத்திக்குழு அதன் செயற்பாட்டினைத் தொடங்கியுள்ளது. இனி வருங்காலத்தில் மரணச் சடங்குகள் யாவும் சம்பந்தப்பட்ட இடைக்காடு இந்து மயான அபிவிருத்திக்குழுவின் அனுசரணையுடன் நடாத்தப்படும்.
இடைக்காடு மக்கள் நலன் புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய சுவிஸ் வாழ் எம்மவரான சிறீச்ச்சிதானந்தம் அவர்களால் கட்டடங்கள், சுற்றுமதில் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எமது ஊர் மக்கள் சார்பாக நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மயானத்தின் மற்றைய பக்கங்களுக்கு முள் கம்பிவேலி போடப்பட வேண்டியுள்ளது. இதற்கு புலன் பெயர் வாழ் எம் மக்களிடம் உதவியினை வேண்டி நிற்கின்றோம்.
நன்றி
இடைக்காடு சாமித்திடல் இந்து மயான அபிவிருத்திக்குழு

More

திரு வேலுப்பிள்ளை சுவாமிநாதன் இறைபதம் அடைந்தார் (Jan. 10, 2022)

idaikkadu
Informed by : சுவைந்திரா இல்யாஸ்
Contributed by : Sengo Vel
Card image cap

My beloved, handsome, selfless and fearless father ,
Veluppillai SWAMINATHAN

has peacefully passed away in our home in Idaikkadu , Sri Lanka.
Our hearts are broken by this loss.

May his soul Rest In Peace

Suvendra Ilyas
Aruleeswar SWAMINATHAN
Arulvasan SWAMINATHAN

எனது அன்புக்குரிய, தன்னலமற்ற கம்பீரமான தந்தை,

வேலுப்பிள்ளை சுவாமிநாதன்

இன்று இலங்கையில் இடைக்காட்டிலுள்ள எங்கள் இல்லத்தில் நிம்மதியாக காலமானார்.

இந்த இழப்பால் எங்கள் இதயம் உடைந்துவிட்டது.

அவரது ஆத்மா இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் பாத கமலத்தில் சாந்தியடையட்டும்.

சுவேந்திரா இல்யாஸ்
அருளீஸ்வர் சுவாமிநாதன்
அருள்வாசன் சுவாமிநாதன்

More

இடைக்காடு கலை இலக்கிய மன்றத்திக்கு இரண்டு இலத்திரனியல் சுருதிப்பெட்டிகளை வழங்கல் (Dec. 21, 2021)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

தமிழ் தேசியமக்கள்முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயேந்திரகுமார்பொன்னம்பலம் அவர்கள் இடைக்காடு கலை இலக்கிய மன்ற சிறார்களின் நலன் கருதி இடைக்காடு கலை இலக்கிய மன்றத்திற்கான இரண்டு இலத்திரனியல் சுருதிப்பெட்டிகளை கோப்பாய்பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்ற செயலாளர் சுதாஸ் ஆசிரியரிடம் வழங்கும் போது.

More

விளையாட்டு உபகாரணங்கள் கையளிப்பு நிகழ்வு (Dec. 15, 2021)

idaikkadu
Informed by : க. வீரசிவாகரன். (வீரா)
Contributed by : Elango veluppillai
Card image cap

லண்டனை சேர்ந்த திருமதி ஆறுமுகசாமி கலாதேவி என்பவர் மறைந்த தந்தையார் அமரர் சிவனடியான் நினைவாக 53325 /= பெறுமதியான சிறுவர்களை மகிழ்வூட்டும் விளையாட்டு உபகரணங்களை அவரது உறவினரான திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி ஊடாக முன்பள்ளி ஆசிரியர்களிடம் இப் பொருள் கையளிப்பு நிகழ்வு 11/12/2021 இன்றைய தினம் இடம்பெற்றது..இவ் உதவித்திட்டத்தினை வழங்கிய திருமதி.ஆறுமுகசாமி கலாதேவி அவர்களுக்கும் அப்பொருட்களை நேரடியாக வந்து கையளித்த திரு.வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்களுக்கும் மற்றும் இவ் செயற்திட்டத்திற்கான அனுசரனையாளரை இணைத்துதவிய திரு.க.முருகவேல் ஆசிரியர் அவர்களுக்கும் பொருட்கொள்வனவில் ஈடுபட்ட நிர்வாக உறுப்பினர்கள் திரு.சுதாஸ்குமார், திரு.ஜெயஜீவா ஆகியோர்களுக்கும் முன்பள்ளி நிர்வாகம் சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

செயலாளர்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி

More

மரண அறிவித்தல் (Dec. 11, 2021)

idaikkadu
Informed by : suhanthan
Contributed by : suhanthan kandasamy
Card image cap

மரண அறிவித்தல்
இடைக்காடு வாரியளவை பிறப்பிடமாகவும்,செம்பிகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் 10-12-2021 அன்று இறைபதமடைந்தார். அன்னார் சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், தணிகைநாதனின் பாசமிகு தாயாரும், பிரிதாவின் அன்பு மாமியும், சுரபிகா, கோசிகா வின் பாசமிகு பேத்தியும், அமரர்கள் வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை,வல்லிபுரம், சிவசுப்பிரமணியம் ,மற்றும் திரு நடராசா (, ஓய்வு நிலை தபாலதிபர்). மகேஸ்வரி (சுவிஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னாரது இறுதிக்கிரியை 11-12-2021 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் இடைக்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

More

மகாவித்தியாலய நூலகத்தினை புனரமைப்பு செய்தல் (Nov. 28, 2021)

idaikkadu
Informed by : ஜீவா மாஸ்டர் (இ. ம. வி )
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு மகாவித்தியாலய நூலகம் யுத்தத்தின் பின்னர் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளது.நூலகத்தின் தற்போதைய நிலைமையினை மேலே பதிவிடப்பட்ட பட த்தின் ஊடாக அறிந்து கொள்ளலாம். தற்போது மாணவர்களின் சுய கற்றல் மேம்படுத்துவதற்கு நூலகத்திற்கு பல்வேறு தேவைகள் காணப்படுகின்றது. புத்தகத்தை பேனுவத ற்கான அ லுமாரி கள் மாணவர்களின் கற்றலுக்கு தேவையான நூல்கள் மாணவர்கள் தளபாட வசதிகள்
யன்னல் திரைச்சீலைகள். என்பன தேவைகளை நிறைவேற்றுவதற்கு புலம்பெயர் உறவுகளிடம் இருந்து நிதியி னை இடைக்காடு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கின்றது. இந்நூல் தற்கால நவீன சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதற்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
பாடசாலை அதிபர் திரு திரு குழந்தைவேலு வாகீசன் 0776544666
பாடசாலை ஆசிரியர் திரு ஜெ. ஜெய ஜீவா 0771157910
பாடசாலை ஆசிரியை திருமதி சுவாமிநாதன்

வெளிநாட்டு தொடர்பு இணைப்பு பழைய மாணவர் வேl. இளங்கோ 416 909 1107

More

திருமதி சிவக்கொழுந்து முத்தையா (Nov. 24, 2021)

idaikkadu
Informed by : Selva
Contributed by : Selva Ratnasabapathy
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி சிவக்கொழுந்து முத்தையா
சோதிபைரவர் கோவிலடி இடைக்காடு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவக்கொழுந்து முத்தையா இன்று 23.11.2021 அதிகாலை இறைவனடி சேர்ந்தார்
அன்னார் அமரர் நாகமுத்து முத்தையாவின் பாசமிகு துணைவியாராவர்.
அன்னாரின் குடும்ப உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-11-2021 அன்று இடைக்காட்டில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

ஓம் சாந்தி ஓம் சாந்தி

More

சிறுவர்களை கவுரவிப்பதற்கான சீருடை உதவி (Nov. 3, 2021)

idaikkadu
Informed by : க. வீர சிவாகரன் (வீரா )
Contributed by : Elango veluppillai
Card image cap

சிறுவர்களை கௌரவிப்பதற்கான கௌரவிப்பு சீருடை உதவி
.......................
லண்டனை சேர்ந்த திரு. இளையதம்பி செல்வக்குமாரன் என்பவர் மறைந்த பெற்றோர்களான அமரர் சுவாமிநாதர் இளையதம்பி,அமரர் செல்லம்மா இளையதம்பி நினைவாக 35800/= பெறுமதியான 25 செட் சிறுவர்கள் கௌரவிப்பு சீருடை மற்றும் அதனை பாதுகாத்து வைப்பதற்கான பிளாஸ்ரிக் பெட்டி ஒன்றினையும் சேர்ந்து இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளிக்கு அவரது மூத்த சகோதரரான திரு.இ.மகேசன் ஊடாக அன்பளிப்பு செய்துள்ளார். அவ் அன்பளிப்பு உதவியை செய்த நல்லுள்ளம் கொண்ட திரு.இளையதம்பி செல்வக்குமாரன் குடும்பத்தினருக்கு இடைக்காடு புவனேஸ்வரி முன்பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 🙏

More

இடைக்காடு 3மில்லியன் அபிவிருத்தி கூட்டம் (Oct. 19, 2021)

idaikkadu
Informed by : க. சஞ்சீவன்
Contributed by : Sengo Vel
Card image cap

மேலதிக விபரங்களுக்கு கீழேயுள்ள தொடர்பை அழுத்தவும்.

More

திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி - இறைபதம் அடைந்தார். (Oct. 1, 2021)

idaikkadu
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி
ஓய்வு நிலை தொழில்நுட்ப வியலாளர்.மன்னார் மாந்தை உப்பளம்
இடைக்காடு அச்சுவேலி
கணபதிப்பிள்ளை ஆறுமுகசாமி நேற்று 30.09.2021 இறைபதம் அடைந்தார்.
அன்னார் தங்கமணியின் ஆருயிர்க் கணவனும் கௌசிதரன் கிசோதரன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும் ஆவார்.
எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி

More

Young Graduates - UK (Sept. 25, 2021)

idaikkadu
Informed by : Bavan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

The talented young girls from our village who recently graduated from their universities cutting the cake with pride.
Congratulations! Your hard work, sacrifices and dedication have been rewarded!

Arani Manoharan BSc Accounting and Finance (Parents: Manoharan - Sumathy)
Aruvi Jeyakanthan BSc Mathematics with Actuarial Science (Parents: Jeyakanthan - Akila)
Manasha Sivaparan BSc Economics and Business Finance (Parents: Sivaparan - Shanthy)
Bhawana Vettivel BSc (Hons) Orthoptics (Parents: Vettivel – Jeyavathany)
Thevani Sivakumar BSc Mathematics with Statistics (Parents: Sivakumar – Nagalogini)
Thiviya Balakumar MPharm Master of Pharmacy (Parents Balakumar – Sivamalar)

More

இடைக்காடு முன்பள்ளி செயட்குழு கூட்ட தீர்மானங்கள் (Sept. 14, 2021)

idaikkadu
Informed by : க. வீரசிவாகரன். (வீரா)
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி

செயற்குழு கூட்ட தீர்மானங்கள்
18-09-2021 சனிக்கிழமை இடம்பெற்ற இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி செயற்குழு கூட்டத்தில் பின்வரும் முடிபுகள் எடுக்கப்பட்டன.
சிறப்பாக இயங்கி வந்த இடைக்காடு கலை இலக்கிய மன்றம் covid -19 காரணமாக பிள்ளைகளின் வரவில் ஏற்பட்ட குறைவும் மற்றும் பிற காரணிகளாலும் நிதிப் பற்றாக் குறைவு ஏற்பட்டதால் அதனைத் தொடர்ந்து நடாத்த சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து அதனை இயக்குவதற்கான நிதிக் கோரிக்கை ஒன்றை கலை இலக்கிய மன்ற செயற்குழு இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளியிடம் முன் வைத்துள்ளது. அதனை ஆராய்ந்த செயற்குழு புலம்பெயர்ந்து வாழும் நிதி ஆளுமைக் குழு உறுப்பினர்களிடம் கலந்துரையாடி, முன்பள்ளிக்கு கிடைக்கும் வட்டிப் பணத்தில் ஆசிரிய வேதனம், மற்றும் பிற செலவுகள் தவிர்த்து மேலதிகமாக உள்ள பணத்தில் ரூபா பத்தாயிரம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன் பள்ளியில் அமைக்கப்பட்ட தண்ணீர் தாங்கிக்கு சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப மூடி போடுதல்.
முன்பள்ளிக்கான பற்றுச் சிட்டையில் முன்பள்ளியின் அடையாளமாக முத்திரையை ( LOGO ) பதிப்பது.அதன் பின் சரியான பற்றுச் சிட்டையை நிதி வழங்குனர்களுக்கு வழங்குதல்.
நன்றி
செயற்குழு- இடைக்காடு புவனேஸ்வரி அம்மன் முன்பள்ளி
14-09-2021

More

மரண அறிவித்தல் (Sept. 9, 2021)

idaikkadu
Informed by : suhanthan
Contributed by : suhanthan kandasamy
Card image cap

திரு செல்லையா வல்லிபுரம்
(ஓய்வு நிலை நிர்வாக அலுவலர் ,கொழும்பு பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு கொழும்பு ,நேபாளம்)
வாரியரியளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டியை புகுந்த இடமாகவும் கொண்ட செல்லையா வல்லிபுரம் இன்று 09.09.2021 தொற்று நோயினால் பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் இறைபதம் அடைந்தார்.
அன்னார் பூபதியின் அன்புத் கணவரும் அமரர்கள் வேலுப்பிள்ளை, சின்னத்தம்பி, தெய்வானை, சிவசுப்பிரமணியம் ,மற்றும் திரு நடராசா (, ஓய்வு நிலை தபாலதிபர்).சரஸ்வதி , மகேஸ்வரி (சுவிஸ்)ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதிக்கிரியைகளின் பின் கெக்கிரைவை மின் தகன மண்டபத்தில் நாளை 10.09.2021 தகனம் செய்யப்படும்.

More

திரு கந்தையா வல்லிபுரம் இறைவனடி சேர்ந்தார் (Aug. 30, 2021)

idaikkadu
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளியின் நிதி ஆளுகைக் குழுவின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த திரு கந்தையா வல்லிபுரம் அவர்கள் இன்று 29.08.2021 இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை முன்பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்

More

மரண அறிவித்தல் இராசலிங்கம் இரவீந்திரன் (Aug. 12, 2021)

idaikkadu
Informed by : Webadmin
Contributed by : Sengo Vel
Card image cap

இடைக்காட்டை பிறப்பிடமாகவும், சிறுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட இரவீந்திரன் இராசலிங்கம் எம்மை விட்டு பிரிந்துள்ளார்.

மேலதிகவிபரங்கள் பின்னர் வெளியிடப்படும்

More

விளையாட்டு உபகரணுத்துக்கான மதிப்பீடு (July 26, 2021)

idaikkadu
Informed by : க.சஞ்சீவன்.( இடைக்காடு )
Contributed by : Elango veluppillai
Card image cap

விளையாட்டு உபகரணுத்துக்கான மதிப்பீடு.இவ் நிதியினை அரசாங்கம் வழங்குகின்றது

More

மரண அறிவித்தல்சின்னத்தம்பி இதயகுமார் (July 15, 2021)

idaikkadu
Informed by : Rajini Arunagiri
Contributed by : Elango veluppillai
Card image cap

மால்வளவு இடைக்காட்டை பிறப்பிடமாகவும் சல்லிகலட்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி இதயகுமார் 15.07.2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் அமரர்கள் சின்னத்தம்பி, வள்ளியம்மையின் இளைய மகனும், அமரர்கள் கிருஷ்ணர், வள்ளிப்பிள்ளையின் அருமை மருமகனும், சிவ ஈஸ்வரியின் ஆருயிர்க் கணவரும் ஆவர்.

அன்னார் அமரர்கள் சத்திவேல், சத்தியபாமா, தருமராசா, சரஸ்வதி, சரோஜா, மற்றும் காந்திமதியின் அன்புச் சகோதரனும், சிவராசா, ஜீவபாஸ்கரி, அமரர் கந்தசாமி, சபாரத்தினம், கனகரத்தினம், வல்லிபுரம், கந்தசாமி, அமரர்களான சுப்பிரமணியம், வேல்முருகு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவர்.

மேலும் அன்னார் கிரிஜா, பவானி, ரஜனி, தனுஜா, தாரணி, கிருஷ்ணபவன், கோகிலா, கல்பனா, கருணா, தெய்வமோகனா, நிவேதா, அஸ்வினி, அரவிந், ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமாவும், வஜிதா, சிவரூபன், அமரர் சிவானந்தம் ஆகியோரின் பாசமிகு பாசமிகு சித்தப்பாவும் ஆவர்.

அன்னா ஈ மைக்கிரியை 15.07.2021 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல் குடும்பத்தினர்.

மனைவி சிவ ஈஸ்வரி:
0094 766513816

More

பாடிப் பறப்போம் குறும் படம் (July 4, 2021)

idaikkadu
Informed by : admin
Contributed by : Sengo Vel
Card image cap

புவனெஸ்வரி அம்மன் பாலர் பாடசாலை பற்றிய குறும் படத்தை பார்க்க கீழேயுள்ள தொடர்பை அழுத்தவும்.

More

உங்களுக்குத் தெரியுமா? (July 1, 2021)

idaikkadu
Informed by : Narayanapillai Swaminathan
Contributed by : Elango veluppillai
Card image cap

உங்களுக்குத் தெரியுமா?
இடைக்காடடடு கிராமத்தின் விவசாய இயந்திரமயமாக்கலின் முன்னோட்டிகள்.
1970ம் ஆண்டு சிறிமாவோ அம்மையாரின் திறந்த சந்தை வாய்ப்பினால் யாழ் விவசாயிகளின் பணம் புழக்கம் அதிகரித்தது.
இதனால் விவசாய இயந்திரங்களின் அறிமுகம் அதிகரித்தது.
மண்ணை உள் கை உழவு வண்டிகள் வாங்கப்பட்டன.Hand tractors or Two wheel tractors.
1. முதலாவது லார்ட் மாஸ்டரை ஓய்வு நிலை தபாலதிபர் திரு சுப்பர் சிதம்பரம் பிள்ளை அவர்கள் அறிமுகம் செய்தார்.
அதே வகையான ஒரு லார்ட் மாஸ்டரை அவரின் மைத்துனர் திருக.கணபதிப்பிள்ளை(சிவலை) அவர்கள் வாங்கினார்.
2.அடுத்ததாக ஒரு மிற்சுபிசி இயந்திரத்தை திரு வே. கணபதிப்பிள்ளை (கொழுந்துக்காரன்) அவர்கள் வாங்கினார்.
3. மூன்றாவதாக எனது தம்பி நா.இ. ஈஸ்வரன் அவர்கள் ஒரு இசக்கி உழவு வண்டியை வாங்கினார். நான் களுத்துறையில் பணியாற்றிய 1972ம் ஆண்டு இருவரும் கொழும்பு சென்று இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தில் வாங்கி சுமையுந்து மூலம் வீட்டிற்கு க் கொண்டு வந்தோம்.
4. நாலாவதாக பலர் குபோட்டா உழவு வண்டியை வாங்கினனர்.
சரி இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு யாது?.
லாண்ட் மாஸ்டர் , மிற்சுபி இரண்டும் மண்ணெயில் இயங்கும் மண் கிளறி வகை (Tillers)
வகையைச் சார்ந்தது. அவற்றின் சில்லுகளைக் கழற்றி விட்டு மண் கிளறியை Tillers
பொருத்த வேண்டும்.
மற்றைய இரண்டும் இசக்கி குபோட்டா வண்டிகள் டீசல் எண்ணெயில் இயங்குபவை.
சில்லுகளைக் இவற்றால் அதன் பின் மண் கிளறியை அல்லது கலப்பையை Tillers or Plough தொகுதியை பொருத்தி உழலாம்.
இவற்றுடன் சுமை ஏற்றும் பெட்டியைப் பொருத்தலாம்.
இசக்கி நீரினால் குளிரூட்டும் Water cooled எந்திரத்தை க் கொண்டது. இயந்திரத்தின் மேற்பகுதியில் திறந்த நிலையில் உள்ள கிண்ணம் Hopper உள்ளது.
குபோட்டா வளிக் குளிரூட்டி Air cooled உடையது.
இவை எல்லாவற்றிலும் குபோட்டா பல அனுகூலங்களை க் கொண்டுள்ளதால் இன்றும் பல விவசாயிகளின் உள்ளம்கொள்ளை கொண்டது.
கொழுந்துக்காரன் வே.கணபதிப்பிள்ளை எனது மாமா. வர்த்தக நோக்கில் பாரிய அளவில் வெற்றிலைக் கொடியை பயிரிட்டமையால் கொழுந்துக்காரன் என அன்பாக அழைக்கப்பட்டார். கலகலப்பானவர். சமூக சேவகர்.
ஓமம் வளர்க்காத குருக்கள் இல்லாத எனது திருமணத்தை நடாத்தி வைத்தார்.
எம் முன்னோர்களைப் போற்றுவோம்.

More

முன்பள்ளி ஆசிரியர்களின் துப்பரவு பணி (June 28, 2021)

idaikkadu
Informed by : செயலாளர்
Contributed by : Elango veluppillai
Card image cap

சமூகத்தொற்று நோய் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டிருக்கின்ற பொழுதிலும் முன்பள்ளிச் சூழல் இடையிடையே மூன்று ஆசிரியர்களும் இணைந்து துப்பரவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த காலங்களில் தவணை விடுமுறை முடிந்து பாடசாலை ஆரம்பிக்கும் போது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணனந்து இவ் துப்பரவு பணிகளை செய்து வருவது வழமை..
இடர்காலத்திலும் முன்பள்ளி சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு செயற்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களை தெரிவிப்பதுடன்..முன்பள்ளியில் சில மாற்றங்களை கொண்டுவருவதற்காகவும் மற்றும் இவ் இடர் நிலமையிலும் பொருளாதாரரீதியில் மிகவும் நலிவுற்ற அவ் மூன்று ஆசிரியர்களுக்குமான கொடுப்பனவுகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவும் எம்மோடு இணைந்த புலம்பேர் உறவுகளை இத் தருணத்தில் மீண்டும் நன்றியுடன் நினைவுகூறுகின்றோம்

செயலாளர்

( தகவலுக்காக பதிவு செய்யப்பட்டது)

More

மரணஅறிவித்தல் (June 20, 2021)

idaikkadu
Informed by : ஆறுமுகம் ஆறுமுகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்

சிவகுரு ஆறுமுகம் (கணக்காளர்)

1949 .03 .02 - 2021. 06.20 )

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சோதி என்று அழைக்கப்படும் சிவகுரு ஆறுமுகம் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ஆறுமுகம் ( பெரியவர்) குழந்தையார் ஆகியோரின் மகனும் காலம்சென்றவர்களான சிவபாக்கியம், கிருஷ்ணவேணி, சரசுவதி மற்றும் கந்தசாமி , பொன்ராசா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்அவுட்றி( Audrey) அவர்களின் கணவரும் சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும் நிலுக்சி அவர்களின் மாமனாரும் ஆவார் . அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்று கண்டியில் நடைபெற்றது .

தகவல் - ஆறுமுகம் ஆறுமுகம் 077. 6624464

More

திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா (June 15, 2021)

idaikkadu
Informed by : E.V.Murugaiah
Contributed by : Elango veluppillai
Card image cap

திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா

தமிழ் ஈழம் இடைக்காட்டுடை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. வேலுப்பிள்ளை நாகம்மா இன்று மண்ணுலகை விட்டு நீர்துள்ளார்.

அன்னார் அமரர்கள் முருகேசு சின்னாச்சி ஆகியோரின் மகளும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இன் அன்பு மனைவியும்.

அமரர்கள் சின்னப்பிள்ளை, வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை, பெரியதம்பி, மாணிக்கம், வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரியும்.

திரு.முருகுப்பிள்ளை இன் பாசமிகு தாயாரும், சத்திஎஸ்வரி இன் அருமை மாமியாரும்.

பகீரதன்,யசோதரன், அமரர் வாசுகி, திலீபன் ஆகியோரின் அப்பாம்மாவும்.சிவதர்ஷினி இன் பேத்தியும், டர்மிகா வின் பூட்டியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

முருகுப்பிள்ளை.0776872589

More

நாளாந்தம் 2021 தைமாத தொடக்கம் வைகாசி மாத பங்களிப்பு (June 11, 2021)

idaikkadu
Informed by : கந்தசாமி முருகவேல்
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு அன்பர்கள் பெருமளவு பங்களிப்பு செய்கிறார்கள் மகிழ்ச்சி

கந்தசாமி முருகவேல்

More

கண்ணீர் காணிக்கை (May 27, 2021)

idaikkadu
Informed by : Webadmin
Contributed by : Elango veluppillai
Card image cap

கண்ணீர் காணிக்கை

More

மரண அறிவித்தல் (May 24, 2021)

idaikkadu
Informed by : Suja Kesan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இரத்தினசோதி அவர்கள் 21/05/2021 வெள்ளிக்கிழமை இடைக்காட்டில் இறைபதமடைந்தார்.
அன்னார் இரத்தினசோதியின் அன்பு அன்பு மனைவியும் காலஞ்சென்ற கந்தசாமி, மற்றும் சண்முகநாதன், தனேஸ்வரன்(UK), ஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் சுகந்தினி, காலஞ்சென்ற மகிந்தன், மற்றும் சுயாந்தினி(UK), நிசாந்தன் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், லம்போதரன், கேதீஸ்வரன்(UK), கோபிகா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுயாந்தினி கேதீஸ்வரன்(மகள்): UK+44 7958398497

More

திரு. வேலுப்பிள்ளை கணேசலிங்கம்( அப்பன்) பனை ஓலைகள் அன்பளிப்பு (May 23, 2021)

idaikkadu
Informed by : இடைக்காடு முன்பள்ளி நிர்வாகம்
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காட்டினை சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை கணேசலிங்கம்( அப்பன்) என்பவர் முன்பள்ளி தற்காலிக கூரையின் மேல் வெப்பத்தை தனிக்க போடுவதற்காக 400 க்கும் அதிகமான பனை ஒலைகளை அன்பளிப்பாக தனது பொறுப்பில் வெட்டி அடுக்கப்பட்டுள்ளது அதை விரைவில் வெப்பத்தை தனிக்கும் நோக்கில் கூரையின் மேல் அவரது பொறுப்பிலையே அடுக்கப்படவுள்ளது சமகாலத்தில் முன்பள்ளியின் பெற்றோராகவும் ஒர் சமூக செயற்பாட்டாளராக காணப்படுகின்ற அவ் நல் உள்ளத்திற்க்கு நிர்வாகம் ,மற்றும் பெற்றோர் சார்பிலும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

தகவலுக்காக பகிர்கின்றோம்

More

கல்வி கரங்கள் கடந்த கால அறிக்கை (May 10, 2021)

idaikkadu
Informed by : கல்வி கரங்கள்
Contributed by : Elango veluppillai
Card image cap

: பாடசாலைக் கல்வியை பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் வைகாசி மாதம் 2017 இல் "கல்விக்கரங்கள்" அமைப்பு உருவாக்கப்பட்டது. கல்விகற்பதற்காக பொருளாதார ரீதியில் இடர்படுகின்ற மாணவர்களுக்கு உதவுவதும், அதன்மூலம் உயர்கல்வி பயிலும் மாணவர் சதவீதத்தை அதிகரிப்பதும் இக்கல்வி திட்டத்தின் நோக்கமாக அமைகிறது. அதன் அடிப்படையில் இவ் அமைப்பிற்சகான திட்டங்கள், யாப்புகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் கல்விகரங்கள் வேண்டுகோளுக்குகமைய புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட நிதியிலிருந்து பெறப்படும் வட்டிப்பணம் மாதாந்தம் மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஆரம்ப, இடைநிலை, உயர்தர பிரிவுகளில் கல்விபயிலும் 17 மாணவர்கள், 2020 இல், இதன்மூலம் பயன்பெறுகிறார்கள். ஆர்வமுள்ள கொடையாளர்கள் எமது அமைப்போடு தொடர்புகொள்ளவும்.


கடந்தகால கணக்கறிக்கை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

"சமூகத்தின் விழிப்புக்கு கல்வியே மூலதனம்”

தொடர்புகளுக்கு

த.கிருபாகரன் (தலைவர்):- +94-718422397
செ.செல்வவேல்(செயலாளர்):- +94-772105354
ச.சுலக்சன்(பொருளாளர்):- +94-779440461
-நன்றி-

More

GCE A/L Results Idaikkadu (May 5, 2021)

idaikkadu
Informed by : Swaminathan Master
Contributed by : Elango veluppillai
Card image cap

GCE A/L Results Idaikkadu

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை இன்று (18-04-2021) காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை, (April 28, 2021)

idaikkadu
Informed by : செயற்குழுவும், விசேட செயலணியும்.
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்று (18-04-2021)காணொளி மூலமாக நடைபெற்ற செயற்குழு கூட்ட அறிக்கை,
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர்பாடசாலையின் நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் விசேட செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து இன்று
நடாத்திய கலந்துரையாடலின் பிரகாரம், அங்குள்ள நிர்வாக செயற்குழுவின் தலைவர்,
செயளாளர், பொருளாளர் ஆகியோரின் ஆலோசனைக்கமைவாக பின்வரும் முடிவுகள்
எடுக்கப்பட்டன, அவற்றை அங்குள்ள நிர்வாக செயலணி நிறைவு செய்வார்கள்.
1. பாலர் பாடசாலை ஆசிரியை ஒருவர் விபத்தில் சிக்கியதால் ஏற்கனவே தெரிவு
செய்யப்பட்ட மூன்றாவது ஆசிரியர் 19-04-2021 திங்கள் முதல் தனது கடமையை
பெறுப்பேற்கிறார், ஆசிரியர்கள் மூவருக்குமான ஊதியம் நிரந்தர வைப்பில் இருந்து
கிடைக்கப்பெறும் வட்டிப்பணத்தில் இருந்து ரூபா 30000-00 தில் அவர்களின்
சேவைக்கால அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.
2. மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான வண்ணக் கடதாசிகள் போன்ற பொருட்களை
வாங்கவும், போட்டொ பிரதி எடுத்தல் போன்ற தேவைகளுக்கு அதே வட்டிப் பணத்தில்
5000-00 வழங்கப்படும்,
3. மாணவர்களின் விளையாட்டு மைதானம் சீரமைக்கப்படும், விளையாட்டு
உபகரணங்களும் திருத்தியமைக்கப்படும்.
செயற்குழுவும், விசேட செயலணியும்.
18-04-2021
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலைக்கான நிதி சேகரிப்பு
மொன்றியல் வாழ் அன்பர்கள் வழங்கிய நிதி விபரம். பகுதி -1
1. செந்தில்ரூபி பரமசிவம் 500-00
2. மைதிலி மகேந்திரன் 500-00
3. பிரசாந்தி கஜன் 500-00
4. வனிதா மகிபன் 200-00
5. சுபா குகதாசன் 200-00
6. வதனி ஈஸ்வரதம்பையா 100-00
7. சுபத்திரா ஜெயகாந்தன் 100-00
8. வனஜா ஜெயகுமார் 200-00
9. கஜனி ஜெகநாதன் 400-00
10. சாந்தரூபி ஞானவேல் 100-00
அல்பேட்டா, கனடா
11. கிருத்திகா ரத்னவேல் 500-00
ரொரன்ரோ ,கனடா
12. சந்திரமதி வரதராஜன் 100-00
13. புனிதவதி கணேசன் 100-00
14. மோகனா ஈஸ்வரமூர்த்தி 250-00
15. நிவசா ஜெயகுமார் 500-00
16. நாகேஸ்வரி சுரேஸ் 100-00
17. சுமித்திரா சத்தியநாராயணன் 500-00
18. சுபத்திரா சிவனொளிபாதம் 100-00
19. லோஜி ஞானசேகரம் 100-00
20. தயாளினிதேவி கருணாகரன் 500-00
21. மொழி வேல் 50-00
22. சிவலோஜினி சிறிசிவகாசிவாசி 100-00
23. சுரேன் பரமேஸ்வரன் 100-00
24. பத்மாவதி நவகுமார் 500-00
25. செல்வதி பார்த்தீபன் 100-00 ----------- 6400-00
---------------------------------------------------------------------------
ரொரன்ரோ கனடா
1. தம்பிமுத்து கதிரமலை 500-00
2. மோகனா கேசவமூர்த்தி 500-00
3. வசந்தமலர் பொன்னீஸ்வரன் 500-00
4. முருகேசு குகன் 500-00
5. சுகி இளங்கோ 500-00
6. அனுசா சுதன் 500-00
7. சுபத்திரா கந்தையா 500-00
8. முத்துலட்சுமி சிவலிங்கம் 500-00
9. அரவிந்தன் மகேசன் 250-00
10. ரவீந் மகேசன் 250-00
11. பரமேஸ்வரி கந்தவேல் 200-00
12, குகமலர் இடைக்காடர் 200-00

13. பவானி கணேசமூர்த்தி 200-00
14. சிவரூபி செல்வராஜ் 200-00
15. கமலினி முருகேசமூர்த்தி 200-00
16. கஜானி தனஞ்செயன் 200-00
17. விஜயலட்சுமி கந்தையா 200-00
.18. விழி ரகுநாதன் 100-00
19. பிறேமா சுப்பிரமணியம் 100-00
20. சத்தியதேவி உதயணன் 100-00
21. சிவசக்தி சின்னராசா …

More

வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை இறைபதமடைந்தார். (April 20, 2021)

idaikkadu
Informed by : தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா
Contributed by : Elango veluppillai
Card image cap

மரண அறிவித்தல்
வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி வேலாயுதபிள்ளை
இன்று 20—04-2021 செவ்வாய் இரவு இறைபதமடைந்தார்.
அன்னார் தங்கத்தின் அன்புக் கணவரும், தெய்வநாயகி ( கனடா ) ,தெய்வராணி ( இலங்கை ),
தனேஸ்வரன் ( அவுஸ்ரேலியா), விக்கினேஸ்வரன் (லண்டன் ), தெய்வமணி (கனடா)
ஆகியோரின் அன்புத் தந்தையாரும், தர்மலிங்கம், ஈஸ்வரன், ஜானகி, சங்கீதா, சிவஞான ரூபன்
ஆகியோரின் அன்பு மாமனாரும், கவிதன், நிந்துயன், கிருஷியா, ஜினோஜா, பிறேமிகா, மேனகன்,
மதுனன், மீனயா, சுகேஷ், நீவிகா ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
மேலும் அன்னார் தெய்வானைப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சிவசுப்பிரமணியம்
ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 21-04-2021 புதன்கிழமை முற்பகல் 10-00 மணிக்கு
இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில்
தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ; தெய்வமணி –ரூபன் – மகள் ,கனடா ; 416 286 6567
தொடர்புகளுக்கு;
தெய்வநாயகி ; 905 471 3160
தெய்வராணி ; 011944170376
தனேஸ்வரன் ; 61438001313
விக்கினேஸ்வரன் ; 011449405560971
தெய்வமணி ; 4162866567 / 416 566 6523 / 647 923 6523

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை (April 3, 2021)

idaikkadu
Informed by : நிதி ஆளுகைக்குழு
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
கிடைக்கப் பெற்ற நிதியினை கையாள்வதற்கான உத்தேச செயற் திட்டம்.
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக் கிணங்க , இடைக்காடு இணையம் அதற்கான முன் முயற்சிகளை மேற்கொண்டு புலம்பெயர் வாழ் எம் உறவுகளுடன் தொடர்பு கொண்டதன் பயனாக ,கனடா, லண்டன், சுவிஸ் ,டென்மார்க் போன்ற நாடுகளில் வாழும் எம் உறவுகள் கணிசமான நிதியினை வழங்கி உதவியிருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள். இனி கிடைக்கப் பெற்ற நிதியினை எவ்வாறு மிகக் கவனத்துடன் பாவிப்பது என நாம் ஓர் திடமான திட்டத்துடன் செயலாற்றுவது அவசியமாகும். எனெனில் இதுவே இறுதியாக கிடைக்கும் நிதியாகும். இதற்கு மேல் எம்மால் இன்னொருமுறை நிதி சேகரிப்பில் ஈடுபட முடியாது, மக்களாலும் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்க முடியாது, எனவே கிடைக்கப் பெற்ற நிதியினை நீண்ட காலத்திற்கு பயன் படும் முறையில் அதற்கான திட்ட வரைபு ஒன்றை நாம் உருவாக்கி அதனை செயல் படுத்த வேண்டியது அவசியமாகும்.

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலை
இன்றைய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கான முன்மொழிவுகள்.
1. இடைக்காட்டில் உள்ள விசேட கல்வியை பெற்றுக் கொண்ட பெண் பிள்ளை ஒருவரை தெரிவு செய்து அவருக்கு பாலர்பாடசாலை சம்பந்தமான மூன்று மாதகால விசேட பயிற்சி ஒன்றினை எமது செலவில் வழங்கல். அவர் இரண்டு வருட காலம் கட்டாயமாக இப் பாலர் பாடசாலையில் பணி புரிதல் அவசியம். அத்துடன் மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்தினையும் செயற்படுத்தல் வேண்டும்.
2. மாணவர்களுக்கு கல்வி மட்டும் கற்பித்தலுடன்நிற்காது, சுற்றாடல் அறிவியல் போன்ற விடயங்களுக்கான சுற்றுலாவுடன் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் வேறு பாலர் பாடசாலை மாணவர்களுடன் இணைந்து பயனுள்ள விடயங்களை பகிர்ந்து கொள்ளல்
3. மாணவர்களுக்கான சீருடை ஒன்றினை அவர்களுக்கு வழங்கல். புற களப் பயிற்சிக்கான வளங்களை பெற்றுக் கொடுத்தல். வர்ணம் தீட்டுதல். மாதிரி வடிவங்களை பொருத்துதல், வடிவமைத்தல் போன்றவை.
4. பழுதடைந்திருக்கும் வெளிக்கள விளையாட்டு உபகரணங்களை திருத்தியமைத்தல்.
5. கிடைக்கப் பெற்ற நிதியினை அதியுயர் வட்டியை பெறுவதற்காக 60 வயதிற்கு மேற்பட்ட மூவரை தெரிவு செய்து அவர்களின் பெயரில் வைப்பில் இடப்படுகிறது. அவர்களின் மனமுவந்த ஒத்துழைப்பிற்காக மாதாமாதம் அவர்களுக்கு ஒரு சிறு தொகை பணத்தினை கிடைக்கப் பெறும் வட்டியில் இருந்து வழங்கல்.
மேற்படி அலோசனைகளை பாலர் பாடசாலை நிர்வாக செயற்குழுவும், இடைக்காட்டில் உள்ள விசேட செயற்குழு உறுப்பினர்களும் கூடி அவற்றை முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்து புலம்பெயர் விசேட செயற்குழுப்பினர்களுடன் இணைந்து அவற்றை செயற்படுத்தப்படும்
இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் …

More

பணி ஓய்வு பெறும் ஆசிரியரின் சேவையை மதிப்போம். வாழ்த்துவோம். திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம். (March 27, 2021)

idaikkadu
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

பணி ஓய்வு பெறும் ஆசிரியரின் சேவையை மதிப்போம். வாழ்த்துவோம்.
திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம்.
இரசாயனவியல் ஆசிரியை.
இடைக்காடு ம.வியிலும் புத்தூர் ஶ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியிலும் 32 வருடங்கள் அர்ப்பணிப்பான சேவை ஆற்றி தனது 55 ஆவது வயதில் பணி ஓய்வு பெறும் எனது மாணவி திருமதி தெய்வமலர் தர்மகுலசிங்கம் அவர்களை வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன்.
பணியை செவ்வனே செப்பனே செய்து முடித்த திருப்தியில் திகழும் திலகமே!! வாழ்த்துக்கள்.. சந்தோஷமும் கூட.ஓய்வுகாலத்திலும் ஏதோ ஒரு வழியில் உங்கள் சேவை தொடரும் என்ற நம்பிக்கையுடன்...🙏🙏

More

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை. (Feb. 23, 2021)

idaikkadu
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் பாலர் பாடசாலையின் நிதியுதவிக் கோரிக்கை.
உலகெங்கும் பரந்து வாழும் எம் அன்பு உறவுகளே!
மேற்படி விடயம் தொடர்பாக இடைக்காடு இணையத்தில் நாம் குறிப்பிட்டதற்கமைய இத்தொகையானது இலங்கையிலுள்ள வங்கியில் வைப்பில் இடப்பெற்று அதில் இருந்து கிடைக்கும் வட்டியை எடுத்துத்தான் அவர்களுக்கான ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

இதுவரை காலமும் முன்பள்ளியானது எம்மிடம் எந்தவொரு நிதிக் கோரிக்கையையும் வைக்கவில்லை, தற்போதைய சூழ்நிலையில் அவர்களால் இதனைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை. நாமும் தொடர்ந்து வருடாவருடம் நிதி சேகரிப்பில் ஈடுபடமுடியாது, இதுவே முதலும் கடைசியுமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றோம் , எனவே கணிசமான தொகை ஒன்றை வைப்பில் இடுவதன் மூலம் மீண்டும் ஒரு நிதிக் கோரிக்கை எழாதவாறு செய்ய வேண்டும் என்பதே எமது முடிவாகும்,
அப்படி சிறந்து
விளங்கிய பாலர் பாடசாலை covid-19 காரணமாக செயல்படாததால் அங்கு பணியாற்றும்
ஆசிரியப் பெருந்தகைகளுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
வேதனைக்குரிய விடயமாகும்.
இரண்டு ஆசிரியர்கள் 8000-00 ரூபா ஊதியத்தில் கடமையாற்றினார்கள். பிள்ளைகளின் வரவு
அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும், மற்ற இரு ஆசிரியைகளின் விடுமுறை நாட்களை ஈடு
செய்யவும், மற்றும் மூன்றாவது ஆசிரியையின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு
மூன்றாவது ஆசிரியை நியமிக்கப்பட்டார், அரசினால் இரு ஆசிரியர்களுக்கு 6000-00 ரூபாவுடன்,
நிர்வாகத்தால் வழங்கப்படும் 8000-00 சேர்த்து 14000-00 உம், மூன்றாவது ஆசிரியைக்கு 8000-00
ம் வழங்கப்படுகிறது, எனவே மாதம் 24000-00 தேவைப்படுகின்றது, பிள்ளைகளின் பெற்றாரால்
வழங்கப்படும் நிதி நாளாந்த நடைமுறைச் செலவிற்குதான் போதுமானதாக உள்ளது.
இந் நிலை நீடிக்குமாயின் அந்த ஆசிரியர்கள் அதனைவிட்டு விலக நேரிடும், அவ்வாறு அவர்கள்
விலகினால் எம் இளம் சிறார்களின் கல்வி பாதிக்கப்படும், மாணவச்செல்வங்களும் பிறிதொரு
இடத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும், இவ்வாறான நிலைமை தொடருமானால் இந்த
பாலர் பாடசாலை கைவிடப்பட வேண்டிய நிலை உருவாகும். இதனால் பாதிக்கப்படுவது எமது
சந்ததியினராகும்
அதனை புலம் பெயர் மக்களாகிய நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?,
இல்லையாயின் நாம் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் அதற்கான நிதிக்
கோரிக்கையை அவர்கள் விடுத்துள்ளார்கள் ,இணைப்பை பார்க்கவும்.
எனவே புலம் பெயர் உறவுகளே!
உங்கள் நாடுகளில் நீங்கள் இணைந்து நிதியினை சேகரித்து e transfer ஊடாக அவர்களுக்கு அனுப்பி
உதவுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

தொடர்புகளுக்கு;
இ. செல்வறாஜ் 647 407 8358. kapilan@rogers.com
வை பொன்னீஸ்வரன் 416 409 6521. vponnes@hotmail.com
நா. மகேசன் 416 949 1815
வே. இளங்கோ 416 909 1107. elangovelupillai@gmail.com
ச. பரமசிவம் 1 514 617 3150
நா. மகேந்திரம் 1 514 886 8659
சி. குணம் (சுவிஸ் ) …

More

மரண அறிவித்தல் (Feb. 22, 2021)

idaikkadu
Informed by : Mrs Viji Seelan
Contributed by : Bavan Vairamuthu
Card image cap

நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா)

தோற்றம்: 10/01/1936 மறைவு: 22/02/2021

காளி கோவிலடி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி சரஸ்வதி(கண்ணம்மா) அவர்கள் இன்று 22/02/2021 திங்கள்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்-கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்ற நல்லதம்பியின் அன்பு மனைவியும் நடராசா, சோமசுந்தரம், திருநாவுக்கரசு, நல்லம்மா, சின்னப்பு, சின்னம்மா, கந்தசாமி, இலக்குமிப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் பேபி வத்சலா, ஸ்ரீராகவன், ஸ்ரீதரன், சசிகலா, காலஞ்சென்றவர்களான ஸ்ரீநிவாசகன், உதயசங்கர் (இந்தி) மற்றும் சத்தியகலா, விஜிதகலா, ஆறுமுகஸ்ரீ,, சிவராம் (வசந்தி) ஆகியோரின் அன்புத்தாயாரும், பரமேஸ்வரன், இந்திராணி, காலஞ்சென்ற பவானி மற்றும் ஸ்ரீமனோகரன், ஜெயந்தா உதயகுமார், ஜெயசீலன், மிசேல் (Michelle) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் நாளை 23/02/2021 செவ்வாய்க்கிழமை இடம்பெற்று பூதவுடல் இடைக்காடு சாமித்திடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு;
விஜி, சீலன்: + 44 1793 542564
சசி: +49 151 29768806
சத்தியகலா: +41 794361838
ஸ்ரீராகவன்:+45 71322667
ஸ்ரீதரன்(சிவா)+33 751236363
சிவராம்: +39 3496245646
ஆறுமுகஸ்ரீ: +44 7990726609

More

கண்ணகை ஆழ்வார் ஆசிரியை100வது பிறந்த நாள் 17January 1921 (Jan. 25, 2021)

idaikkadu
Informed by : Yogeswari Sivapalan
Contributed by : Sengo Vel
Card image cap

கண்ணகை ஆழ்வார் ஆசிரியை100வது பிறந்த நாள் 17January 1921 -இடைக்காடு (மாதர்சங்கம்). ❤️இவர் சிறுவர் பாடசலை, தையல் வகுப்பு அன்பான ஆசிரியையாக கடமை ஆற்றினார்.
எங்கள் ஊர் மக்களுடன் அன்பானவராகவும் மிகவும் தெரிந்தவராகவும் அறியப்பட்டார். எங்களது உறவிரானதும் ஆசிரியையும் ஆசையம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இவர் மறைந்தாலும் இவருடைய புகழ் மறையாது.

எமது ஊரில் முதன்முதலாக முன்பள்ளியைத தொடங்கி நடத்தியவர். பெண்களுக்கு தையல் பழக்கியவர். மாதர் சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்து நடத்தியவர்.
நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி
கண்ணகை உந்தன் பெயர்
என்றும்
கண்டதில்லை உன்கையில்
பொன்னகை – நாளும்
கண்டோம் உன் வதனத்தில்
புன்னகை

வெள்ளை மனதுடனும்
வெண்ணரைத் தலையுடனும்
வெண்ணிற உடையும் கொண்டு
அகர முதல எழுத்தும்
ஆத்திசூடியும்
மருதமலை மாமணியும்
எமக்களித்த ஔவை
நம் கரம் பிடித்து
விரல் மடித்து
கரும்பலகையிலும்
கற்பலகையிலும்
கன்னித்தமிழ் அளித்த
கலையரசி

பல்துலக்கி முகம் கழுவி
பாங்காய் மடியிருத்தி
பாடம் புகட்டிய
தமிழ்த்தாய்

நாம் பேசும் தமிழுக்கும்
எழுதும் எழுத்துக்கும்
ஏகபோக சொந்தக்காரி

அகரம் அறியவைத்த சிகரமே
எழுத்தறிவித்த தெய்வமே
ஏடுதந்த ஏந்தலே
என்றும் உன் நினைவு
எங்களுள் வாழும்

அன்னாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட அஞ்சலி
கவிதை உதவி_ வை. பவான்

More

மரண அறிவித்தல் திருமதி சின்னத்தம்பி (Jan. 16, 2021)

idaikkadu
Informed by : Narayanapillai Swaminathan
Contributed by : Sengo Vel
Card image cap

மரண அறிவித்தல்
திருமதி சின்னத்தம்பி
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சின்னத்தம்பி இன்று அதிகாலை காலமானார். இவர் அமரர் ஆசிரியர் சின்னத்தம்பியின் பாசமிகு மனைவியும் நித்தியானந்தன் பவானி அருந்ததி சுரமஞ்சரி கலையரசி அருள்மொழி சிவமலர் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்ஆவார். இறுதிக்கிரியைகள் இடைக்காட்டில் இன்று நடைபெற்றன.

நித்திய சாந்தி அளித்தருளும் இறைவா!ஓம் சாந்தி ஓம் சாந்தி

More

தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள் (Jan. 14, 2021)

idaikkadu
Informed by : வே. இளங்கோ.
Contributed by : Elango veluppillai
Card image cap

தை பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துகள்

விடியற்காலை எழும்போதே
விளையும் நிலம் மனதில் கொண்டு….
தனித்து நின்று செய்யாமல்
தமிழர் கூடி ஒன்றினைந்து…
சேற்றில் காலை வைத்து என்றும்
சோற்றை நமக்குத் தருகின்ற
கண்ணில் காணும் கடவுள் என்றால்
உழவர் அன்றி உலகில் வேறு யார்…?
காலைக் கதிரவன் உதிக்கும் போதே
கவிழ்ந்த நெற்குளை நிமிர்ந்து ஆடும்
அழகு மணிகளால் அசைந்து பாடும்….
அவ்விளைந்த நெற்மணி வீடு சேற…
தைமகள் அவளைத் தாங்கிக் கொள்ள
மாக்கோலமிட்ட மண்மணப் பானை
மகிழ்ச்சியில் அவளை ஏந்திக் கொள்ள…
புத்தம்புதுப் பானையில் பால்போல
அவள் பொங்கி வர…
அவளைப் பார்க்க ஆசை கொண்டு
கொம்பு நிறைய பூ சுற்றி….
பட்டு வேட்டிக் கழுத்தில் கட்டி
நெற்றிச் சுட்டிப் பொட்டு வைத்து
எங்கள் வீட்டுச் செல்வமாக
ஏறுபூட்டி காளை நிற்க..
உழவு காக்கும் விவசாயி
உறக்கச் சொல்லிக் குலவையிட
பால்பானை மெல்லப் பொங்க
பொங்கலோ பொங்கல் என்று சொல்லி
தைமகளை வரவேற்போம்….

நன்றி
வரிகள்,
மாங்கனி சந்தோஷ்

More

இடைக்காடு இணையத்தள வாசகர்கள் நண்பர்களுக்கு இனிய 2021 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள், (Jan. 1, 2021)

idaikkadu
Informed by : வே. இளங்கோ.
Contributed by : None
Card image cap

உலகெங்கும் பரந்து வாழும் எம் இடைக்காடு இணையத்தள வாசகர்கள் நண்பர்களுக்கு இனிய 2021 வருட புத்தாண்டு வாழ்த்துக்கள்,

வருகின்ற புத்தாண்டில் ” பழையன கழிதலும் புதியன புகுதலும் “ என்பதற்கிணங்க கடந்த வருட கசப்பான சம்பவங்கள், நிகழ்வுகள் யாவும் நீங்கி புத்துணர்வுடனும் உற்சாகத்துடனும் புதிய ஆண்டினை வரவேற்று ,வருகின்ற ஆண்டில் எல்லா நலன்களும் ,நல்வாழ்வு, சுபீட்சம், கல்வி, செல்வம். நோயற்றவாழ்வு, நல்லாரோக்கியம் என எல்லா சுகங்களும் கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி எமது கருமங்களை தொடங்குவோம்,
கடந்த 15 ஆண்டுகளாக உங்களுடன் பயணித்து உங்களுக்கான சேவையில் நாமும் இணைந்து பல்வேறு தரப்பட்ட கட்டுரைகள் படங்கள், செய்திகள் , அறிவித்தல்கள், வாழ்த்து மடல்கள், போன்ற பயனுள்ள விடயங்களை இடைக்காடு இணையத்தில் பிரசுரித்தும், உங்களின் முக்கியமான அறிவித்தலை உலகெங்கும் பரந்து வாழும் எம் உறவுகளுக்கு உடனுக்குடன் எவ்வித தாமதமுன்றி கொண்டுபோய் சேர்த்தும் உங்களின் ஆக்கங்களை அவ்வப்போது பிரசுரித்து உங்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டும் வந்திருக்கிறோம் என்பதில் நாம் பெருமிதமடைகிறோம்,
நடப்பு வருடத்தில் இதனை மேலும் மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இடைக்காடு இணையம் புதுப் பொலிவுடனும் புது வடிவத்திலும் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உங்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் என்பன இடம்பெறும் வகையிலும் புனரமைக்கப்பட்டு இன்று உங்கள் முன் வருகின்றது.
கடந்த 15 வருடங்களாக நீங்கள் வழங்கிய அன்பிற்கும் ஆதரவிற்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு இனி வருகின்ற காலங்களிலும் உங்களின் அன்பும் ஆதரவும் என்றும் கிடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு புதிய வடிவத்திலான இணையத்தளத்தை இன்றிலிருந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம்.

இந்த இணையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பிற்கு உதவி புரிந்த தர்சிகா முருகவேல் ( நியூ சீலந்த்து), ஓவிய வடிவமைப்பு செய்து தந்த வன்னியகுலசிங்கம் சின்னதம்பி (இத்தாலி) அவர்களுக்கு நன்றிகள்.

என்றும் உங்கள் பணியில்
வே. இளங்கோ.
கனடா
01-01-2021.

More

கண்ணீர் அஞ்சலி—அமரர் தம்பிமுத்து கதிரமலை (Dec. 28, 2020)

idaikkadu
Informed by : நாராயணபிள்ளை ஈஸ்வரன்
Contributed by : None
Card image cap

விழி நீர் சொரிய
விம்மலுடன் என்
கண்ணீர் பூக்களை
காணிக்கையாக்குகின்றேன்
உறவால் நாம் இணைந்திருந்தாலும்
உள்ளத்தால்
எமை இணைத்தவள்
அன்னை புவனேஸ்வரியே
அதனால் தான் அவசரமாய்
அன்னை உனை அழைத்தாளோ!
ஆண்டுக்கு ஒரு முறை
அன்னையின் திருவிழா
அது பெருவிழா
வேட்டைத் திருவிழா
அது வேடிக்கைத் திருவிழா
ஆடிடும் இளைஞர் கூட்டம்
சேர்ந்தே ஆடிடுவாயே
இனி எப்போது காண்போம்
அந்த இனிய காட்சியை !
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை
அழைத்திடும் தொலைபேசி
அதிரும் குரல் அது
அன்பின் அடையாளம்
ஒருநாள் தவறின்
பதற்றமாய் வரும் அழைப்பு
என்ன சுகவீனமா என
உரிமையோடும் உறவோடும்
இனி யாரையா எனை கேட்பார் !

எல்லா விடையத்தைம்
என்னோடு பகிர்ந்து கொள்வாயே
இறுதிப் பயணத்தை மட்டும்
சொல்ல மறந்தாயோ
வருவேன் என்றுதானே
சொல்லி விட்டுப் போனாய்
வருவாய் என்றுதானே
நானும் காத்திருந்தேன்
எத்தனை பணிகள்
எமக்காய் அங்கே காத்திருக்க
எல்லாவற்றையும் செய்து
முடிப்போம் என்றாயே
இனி எப்படி செய்வது
ஏதுமறியாது தவிக்கின்றேன்
எழுந்து வரமாட்டாயா
என ஏங்குகின்றேன்
வரமாட்டாய் என
தெரிந்தும் என்மனம்
ஏங்குகின்றதே
என் செய்வேன்!
விண்ணுலகு ஏகிய வேந்தனே
உன் ஆன்மா நித்திய நிலைபெற
வேண்டி நின்றேன்
வேறேதும் வேண்டேன்!
நா.இ.ஈசுவரன்.
கனடா
27-12-2020.

More

மரண அறிவித்தல் வல்லிபுரம் இராஜலட்சுமி (Dec. 28, 2020)

idaikkadu
Informed by : ஜெயசீலன்
Contributed by : None
Card image cap

மரண அறிவித்தல்
வல்லிபுரம் இராஜலட்சுமி இறைபதமடைந்தார்
கொற்றவளவு இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட வல்லிபுரம்
இராஜலட்சுமி 28-12-2020 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், ஜெயமங்களம், காலம்
சென்ற ஜெயபாலன், ஜெயவரதன், ஜெயசீலன் அவர்களின் அன்புத் தாயாருமாவார்,
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
உற்றார் ,உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் ;
ஜெயசீலன்:
Varthan-00447422788140
Seelan-0447962160462

More

திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள் (Dec. 27, 2020)

idaikkadu
Informed by : கதிரமலை முகுந்தன்
Contributed by : None
Card image cap

திரு கதிரமலை அவர்களின் இறுதிக் கிரியைகள் covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிக்கப்பட்ட எண்ணிக்கையானவர்கள்
மட்டுமே பங்கு பற்ற முடியுமென்பதால் இந் நிகழ்வானது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கு பற்றும் நிகழ்வாக நடைபெற உள்ளது. எனவே உறவினர்கள் ,நண்பர்கள் இந் நிகழ்வை நேரலை மூலம் பார்வையிட முடியும், அதனை பார்வையிட பின்வரும் இணைப்பை அழுத்தி பார்வையிடவும், இணைப்பில் உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும், அப்போதுதான் பார்வையிட முடியும், நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை 28-12-2020 காலை 8-30 முதல் 10-30 வரை இடம்பெறும்

More

திரு கதிரமலை தம்பிமுத்து அவர்கள் இறைபதம் அடைந்தார் (Dec. 26, 2020)

idaikkadu
Informed by : கதிரமலை முகுந்தன்
Contributed by : None
Card image cap

செம்பிகலட்டி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரமலை தம்பிமுத்து அவர்கள்
26.12.2020 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான தம்பிமுத்து இலக்குமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்றவர்களான கைலாயப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பார்வதிப்பிள்ளையின் அன்பு கணவரும், முகுந்தன் (கனடா), காகுந்தன்(கனடா), தீபா(கனடா), சோபா(கனடா), ஆகியோரின் அன்புத்தந்தையும், சுகந்தினி, யமுனா, சுரேஷ்குமார், பாலகாந்தன், ஆகியோரின் அன்பு மாமாவும்,
நாகேஸ்வரி, தேவராசா, அமரர் நடராசா, மகேந்திராதேவி, சரஸ்வதி, அம்பிகாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரரும்,
சிவநாயகம், ராசம்மா, கந்தசாமி, தெய்வநாயகி, ஆறுமுகசாமி, முருகானந்தவேல், செல்வநாதன், சரஸ்வதி, சிவமலர் ஆகியோரின் மைத்துனரும்,
கோபாலகிருஷ்ணர் சிவகாந்தன்,, இளையதம்பி, கமலேஸ்வரி, விஐயலட்சுமி, ராசாத்தி, மல்லிகாதேவி, மகாலட்சுமி, குருமூர்த்தி ஆகியோரின் சகலனும்,
நாவலன், நிலவன், நிரூபினி, கவீன், ராணியன், ரம்மியன், மாதங்கி, கிருசாந், கவிசன், சாம்பவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு_
முகுந்தன் +1 4167715930.
காகுந்தன் +1 4165608490.
தீபா, பார்வதி +1 4164906281.
சுரேஸ்குமார் +1 4162949764.
சோபா +1 4166092193
காந்தன் +1 4168072193.

More

மணி விழா வாழ்த்துக்கள் (Dec. 25, 2020)

idaikkadu
Informed by : webadmin
Contributed by : None
Card image cap

யா/ இடைக்காடு மகா வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவுத் தலைவதராக நீண்ட காலம் பணியாற்றி இன்று அரச பணியில் இருந்து ஓய்வு பெறும் ஆசிரியை தெய்வமணி தம்பு அவர்களை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகின்றேன். ஓய்வு பெறும் காலத்தில் தரம் 5 பரீட்சையில் உயர் சித்தி வீதத்தையும் வெட்டுப் புள்ளிற்கு மேல் உயர் எண்ணிக்கையையும் பெற்றமை இறைவனே அவரது அர்ப்பணிப்பான 9ஏவையை ஆசிர் வதிப்பது போல் உள்ளது.
21.12.2020 திங்கட்கிழமை தனது மணி விழாவை மயமிக எளிமையாகக் கொண்டாடும் ஆசிரியைகரகு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.... உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறேன்.....

More

வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி (Dec. 25, 2020)

idaikkadu
Informed by : நாராயணபிள்ளை சுவாமிநாதன்
Contributed by : None
Card image cap

செல்வி நிதர்சனா குணபாலசிங்கம் அவர்களினால் எமது இடைக்காடு மகாவித்தியாலய அன்னை பெருமையடைகிறாள்.
எமது வித்தியாலயத்தில் தரம் 1 முதல் 13 வரை கற்று உயர்தரப் பரீட்சைநில் 3A உடன் மாவட்ட நிலை முதலாம் இடத்தையும் பெற்று கொழும்பு பல்கலையின் சட்டத்துறை மாணவியாகச் சேர்ந்து கல்வி கற்றார். இறுதிப் பரீடசையில் சட்டமானி இரண்டாம் வகுப்பு மேற்பிரிவு பட்டத்தைப் பெற்றுள்ளார்.
அவர் Bachelor of Law LLB சட்டமானி என்ற பட்டத்தைப் பெற்று வித்தியாலயத்தின் முதலாவது சட்டமானி என்ற பெருமையைபர பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் அவரை உளமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள் மேன் மேலும் நல்ல நிலை அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டும்

More

இறையருளில் மாப்பாணி கந்தசாமி. (Dec. 23, 2020)

idaikkadu
Informed by : Nagamuthu Mahesan
Contributed by : None
Card image cap

இறையருளில் மாப்பாணி கந்தசாமி.
எமது வாழ்நாளில் பல தரப்பட்ட மனிதர்களுடன் பயணித்திருப்போம் . எமது உள்ளூரில்
பல மனிதர்களின் நோக்கம் அல்லது செயற்பாடுகள் சமூக முன்னேற்றம் சார்ந்ததாகவே இருந்ததை பலரின் செயற்படுகளின் மூலம் கண்டுள்ளோம்.இந்த வகையில் நான் அவதானித்த கற்றுணர்ந்த மாப்பாணியாரைப் பற்றி இங்கு எழுத விளைகின்றேன் .

புலம் பெயர்ந்த இங்கே கை தூக்கி விடுபவர்களை விட தள்ளிக் கீழே விழ வைப்பவர்களே அதிகம்.இதில் இருந்து சற்று மாறுபட்டவராக எமது உள்ளூர்காரர் மாப்பாணியார் இருந்துள்ளார்.எழுபதுகளின் பிற்பகுதியிலிருந்து சமூக சேவைகளினூடாக தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதைய எமது உள்ளூர் வீதிகள் கிரவல் ஒழுங்கையாக,ஒற்றையடி மண் பாதையாக கை ஒழுங்கையாக பற்றையும் பூடுகளுமாய் இருக்கும்.மாரி காலத்தில் ஓய்வாக இருக்கும் நேரத்தில் கிராம வாலிபர்களின் முயற்சியால் உள்ளூர்காரர் அனைவரும் இணைந்து சிரமதான முறையில் ஈடுபடுவோம். அப்போதெல்லாம் மாப்பாணியார் துப்பரவில் ஈடுபடும் எமக்கு உணவு தேநீர்,வடை,அவல் என்று சிற்றுண்டிகளை அளித்து ஊக்கமளிப்பார் .
இவை மட்டுமல்ல பல வாலிபர்களுக்கு சுய வேலை வாய்ப்புகளுக்கு தன்னாலான பல உதவிகளை செய்து கொடுத்துள்ளார். அன்றைய கால கட்டத்தில் எமது விவசாய விளை பொருட்களை இடைத் தரகர்கள் இன்றி நேரடியாக மொத்த வியாபாரிகளுக்கு தகுந்த விலைக்கு பொருட்களை விற்று தந்தார் மேலும் விளை பொருட்களை தகுந்த பெறுமதிக்கு வேண்டி அவைகளை நியாய விலைக்கு விற்பனை செய்து புதிய முயற்சிகளை உருவாக்கினார். மேலும் தனது விளை நிலங்களில் கரணைக் கிழங்கு, மரவள்ளிக் கிழங்கு, சாமி, குரக்கன், சணல், ,தக்காளி, வாழை போன்ற பயிர்களை செய்து இப்படியும் லாபம் பெறமுடியும் என்பதனை நிரூபித்தவர் மாப்பணியார் ஆவர் .

சூழ் நிலைக்குஏற்ப மாட்டுப்பண்ணைகளை உருவாக்கி பால், நெய், எரு போன்ற புதிய முயற்சிகளைத் தொடர்ந்தார்.

உள்ளூரில் நடைபெறும் மானம்பூ திருவிழாவில் புவனேஸ்வரி அம்பாள் கிராம வலம் வரும் போது மாப்பாணியாரின் வீட்டுக்கு முன்னால் பெரு விழாவே கோலம் காணும். அனைவருக்கும் மன நிறைவுடன் பல வகையான சிற்றுண்டிகளை மன மகிழ்ந்து இறை அன்புடன் உபசரிக்கும் பாங்கினை நான் பார்த்திருக்கிறேன் .

பின்னாளில் அம்பாளின் அதி பக்தியினால் அவ் ஆலயத்தில் வெகு நீண்ட காலமாக பொருளாளராக இருந்து ஆலய வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
அக் காலா கட்டத்தில் தன் சுய முயற்சியால் மாலை கட்டும் நுணுக்கங்களைக் கற்று அதிலும் தேர்ச்சியாளர் ஆனார். இவரின் இறையருளை நானும் மெய் மறந்து பார்த்திருக்கின்றேன். இவரின் மகத்தான சேவைகளை எமது கிராமம் பெற்ற காலத்தில் நானும் அவர் காலத்தில் …

More

நிகழ்வுகளின் நினைவுகள்--3 -- இடைக்காடு சனசமூக நிலையம் –1976 (Dec. 23, 2020)

idaikkadu
Informed by : ஈஸ்வரன் நாராயணபிள்ளை
Contributed by : None
Card image cap

நிகழ்வுகளின் நினைவுகள்--3 -- இடைக்காடு சனசமூக நிலையம் –1976
வெள்ளிவிழா மண்டப திறப்பு விழாவும் ---தரிசிக்கும் மருந்தகமும்.
எமதூரில் மருத்துவமனை இல்லாமை ஓர் நீண்ட குறைபாடாக விளங்கி வந்துள்ளது, மருத்துவ தேவைகளுக்கு மக்கள் பக்கத்தில் உள்ள அச்சுவேலி கிராமிய வைத்தியசாலைக்கோ அல்லது வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கோ தான் போக வேண்டியிருந்தது. அதற்கும் நாம் பேருந்தில் செல்வதானால் அச்சுவேலி தொண்டமானாறு பிரதான வீதிக்கு நடந்து சென்றுதான் போகவேண்டியிருந்தது. அதனால் வயது முதிர்ந்தோர் பெரிதும் சிமப்பட்டார்கள் எமதூரில் அடிக்கடி விசக்கடி பாதிப்பு ஏற்படுவதுண்டு. இக்குறைபாட்டை முழுமையாக தீர்க்க முடியாவிடினும் ஓரளவிற்காவது சரி செய்ய வேண்டும் என்ற நோக்கில் 1974 ல் நான் இடைக்காடு சன சமூக நிலைய செயலாளராக செயல்பட்டபோது சன சமூக செயற்குழு தீர்மானித்தது, அச் சமயத்தில் பத்தைமேனி- இடைக்காடு கிராம சேவக பிரிவிற்கான பொதுச் சுகாதாரப் பரிசோதகராக PUBLIC HEALTH INSPECTOR கதிரிப்பாயைச் சேர்ந்த பிறைசூடி அவர்கள் ( அவரின் இயற்பெயர் கந்தையா என நினைக்கிறேன்). நியமிக்கப் பட்டார். அச்சுவேலி பகுதிக்கு அச்சுவேலியை சேர்ந்த பிரத்தியோக வகுப்புக்களை நடாத்தும் சத்தியமூர்த்தி ஆசிரியரின் சகோதரர் அவரின் பெயர் வேதமூர்த்தி என நினைக்கிறேன் .எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. பொது சுகாதார பரிசோதகர் வேதமூர்த்தி அவர்கள் அச்சுவேலிப் பகுதிக்கு கடமையாற்றினாலும் இடைக்காட்டிற்கும் பெரிதும் உதவிசெய்திருக்கிறார் , திரு பிறைசூடி அவர்கள் மிகவும் எளிமையானவராகவும் பழகுவதற்கு இனிமையானவராகவும், உயர்ந்த கம்பீரமான தோற்றமும் கடமையுணர்வும் கொண்டவராக இருந்தார். அதுமட்டுமன்றி பக்கத்தூரான கதிரிப்பாயை அவரது வாழ்விடமாகவும், அக்கிராமத்திற்கே சேவையாற்றும் வாய்ப்பும் கிடைத்தமை எமக்கும் சாதகமாக அமைந்தது. கடமை நிமித்தம் அவர் அடிக்கடி இடைக்காட்டிற்கு வருகை தருவதுடன் சன சமூக நிலையத்திற்கும் வந்து எம்முடன் உரையாடுவது வழக்கம். காலையில் அச்சுவேலிக்குச் சென்று மரக்கறி வாங்கினாலும் வாழைப்பழம் வாங்க இடைக்காட்டிற்குத் தான் வருவார்.
அவருடன் நாம் இது பற்றி கலந்துரையாடினோம். எனது சகோதரர் மருத்துவர் கந்தசாமி அவர்கள் இந்த விடயத்தில் தனது அனுபவங்களை எமக்கு ஆலோசனைகளாக வழங்கினார், அவர் கண்டாவளை அரசினர் மருந்தகத்தில் கடமையாற்றியபோது வாரத்தில் இரு நாட்கள் முரசுமோட்டைக்கும் ,கல்வெட்டித் திடலுக்கும் மதியத்திற்குப் பின் சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம் ,அதனை தரிசிக்கும் மருந்தகம் VISITING DISPENSARY என்பர். நான் அதனை பிறைசூடி அவர்களுடன் கலந்துரையாடும் போது நினைவூட்டினேன், அவர் யாழ் மாவட்ட சுகாதார பணிப்பாளருக்கு D.H.S ஓர் விண்ணப்பம் ஒன்றை எழுதிக் கொண்டு வருமாறும் ஓர் நாள் அவரை போய் சந்தித்து பேசுவோம் என்றார். நானும் அதற்கிணங்க …

More

திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா சிவபதமடைந்தார். (Dec. 14, 2020)

idaikkadu
Informed by : Sakthivel Sathiyamoorthy
Contributed by : None
Card image cap

திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா

தோற்றம் : 10/03/1927
மறைவு : 13/12/2020

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்
கொண்ட திருமதி வேலுப்பிள்ளை பொன்னம்மா அவர்கள் 13/12/2020 (ஞாயிற்றுக் கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான ஆறுமுகம் – செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை – தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும் அமரர் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும் சின்னம்மா(இலங்கை) , பாக்கியவதி (மணி,கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் செல்வ ராஜேஸ்வரி (அவுஸ்திரேலியா), அபித ஈஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் அமரர் சத்தியமூர்த்தி, சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும் சக்திவேல் , சத்தியநாராயணன், பிரபாகரன், சத்தியா , பானுஜா, கௌசிகா, ஹம்சா ஆகியோரின் பேத்தியாரும் ஐங்கரன், கபிலன் , ஓவியா, கதிரன், அகரன் , நதி, சங்கரி, சரண்யா, சிறிராம், சிவராம், சாய்ராம், சஜிராம், அசானா, அனிஷ், அகரன், முகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் தனலட்சுமி (வசந்தி), சுகந்தினி , அமரர் சிறிதரன், நிர்மலா, முரளிதரன், கங்காதரன், வித்தியாதரன் (சங்கர்), செந்தில்வேல், செந்தில்ரூபி , செந்தில்வாணன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

தொடர்புகட்கு :

சக்திவேல் (அவுஸ்): + 642-8807-5976
சத்தியநாராயணன்(கனடா ) + 1 416 577 5000
கங்காதரன் (இலங்கை) - 94-77-603-0063

More

திரு. கந்தையா கணபதிப்பிள்ளை இன்று ஹற்றனில் சிவபதமடைந்தார். (Nov. 26, 2020)

idaikkadu
Informed by : சுரேஷ்
Contributed by : None
Card image cap

திரு.கந்தையா கணபதிப்பிள்ளை (ஓய்வுபெற்ற பிரதம தபால் அதிபர்) பிறப்பு : Dec .15.1924 உதிர்வு: Nov .26 2020

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற பிரதம தபால் அதிபர் திரு.கந்தையா கணபதிப்பிள்ளை இன்று (Nov .26-2020) வியாழக்கிழமை ஹற்றனில் (Sri Lanka ) சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்றவர்களான கந்தையா – சிலம்பாத்தை தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற மயில்வாகனம் – லட் சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும் நாகம்மாவின் அன்புக் கணவரும் ரோகினிதேவி (America) , சியாமளா (Hatton ) , சோமாஸ்கந்தா(Canada ), நாகேஸ்வரி (Canada ), அருள்மொழி (Canada ) அருள்மோகன் (Canada ) ஆகியோரின் அன்புத் தந்தையும்
முத்துவேல்,சிவகுமார்,சுரேஷ்,கிருஸ்னானந்தவேல்,விஜயகலா, கலைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமனும் சுஜா-அமலன், கஜந்தன், தினேசன், துவாரகா, நிருஜன், சிஜானி , பிரசானி, ஜீவிதன் , சதுர்சன் மிதுர்சா , யதுர்சா ஆகியோரின் அன்புப் பேரனும் அஸ்மி, விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் காலம் சென்றவர்களான சின்னம்மா,செல்லம்மா,பொன்னம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலம் சென்றவர்களான ராமசாமி பண்டிதர், வேலுப்பிள்ளை, வேலுப்பிள்ளை, சரவணமுத்து, சிவசுப்பிரமணியம், சிவகாமி அம்மை, கதிரவேலு, அன்னபாக்கியம் ஆகியோரின் மைத்துனரும் சபாரத்தினம் (அமரர்), ராஜகுலசிங்கம்(அமரர்), மற்றும் வள்ளியம்மை,பரமேஸ்வரி ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் Hatton இல் நாளை வெள்ளிக்கிழமை (Nov 27-2020) நடைபெறும் . இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

பிள்ளைகள்

ரோகினி ( மகள் – USA ) 920- 4263168

சியாமளா (மகள் -Srilanka ) 051-2223390

சோமாஸ் (மகன்- Canada) 416-2994946

நாகேஸ்வரி (மகள் -Canada ) 905-2015769

அருள்மொழி (மகள் -Canada ) 416-2899163

அருள்மோகன் (மகன் -Canada ) 416-2890727

More

அன்னபூரணம் சங்கரப்பிள்ளை இறைவனடி சேர்ந்தார் (Nov. 9, 2020)

idaikkadu
Informed by : ஞானஸ்ரீ
Contributed by : None
Card image cap

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னபூரணம் சங்கரப்பிள்ளை அவர்கள் 08-11-2020 ஞாயிற்றுக்கிழமை
அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலுப்பிள்ளை சங்கரப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
விஜயஸ்ரீ, ஸ்ரீவிக்னேஷ் (ஈசா), லங்கராசா (கணேஷ்) , ஞானஸ்ரீ (ரதி) ஆகியோரின் பாசமிகு தாயும் ,
சரவணபவானந்தன் , மகேந்திரராசா , கேதீஸ்வரி (வானதி) , இந்திரகாந்தன் ஆகியோரின் மாமியாரும்
பிரவீணா, கேசிகன், சோபனன், ஹரீஸ், ஹரீனா, தருண் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
ஞானஸ்ரீ - மகள்
+14162390163

விஜயஸ்ரீ - மகள்
+94772968845

More

சின்னத்தம்பி நாகம்மா அவர்கள் இறைபதம் அடைந்தார் (Nov. 7, 2020)

idaikkadu
Informed by : N. Swaminathan
Contributed by : None
Card image cap

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் கல்வியங்காட்டை வதிவிடமாகவும்கொண்ட பேராசிரியர் கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
அவர்களின் அன்பு மனைவி சின்னத்தம்பி நாகம்மா அவர்கள் தனது 81வது வயதில் இறைபதம் அடைந்தார்.
இவர் சிகா சிவகுமார், கருணா சின்னத்தம்பி, தேவா ராஜ்குமார், கங்கா சின்னத்தம்பி ஆகியோரின் பாசமிகு தாயாரும் நல்லையா சிவகுமார், கிருபாசக்தி கருணா, நவரட்ணராஜா ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தேனுகா,திவ்யன், ஓவியா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் விதுஷா, பவுனுஷா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் , காலஞ்சென்றவர்களான இராசம்மா,தெய்வானை(சின்னக்கா),கதிராசி (பொன்னம்மா) சின்னப்பு தம்பிராசா, சின்னப்பு நல்லையா ஆகியோரின் இளைய சகோதரியும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்,பெரியதம்பி ஆகியோரின் மைத்துனியும், கதிராசி தம்பிராசா,இராசேஸ்வரி நல்லையா ஆகியோரின் மச்சாளும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் இன்று கல்வியங்காட்டில் நடை பெறும்

More

திருமதி கமலாம்பிகை சற்குணம் (வயது 76) (Nov. 6, 2020)

idaikkadu
Informed by : Roopan (UK)
Contributed by : None
Card image cap

திருமதி கமலாம்பிகை சற்குணம் (வயது 76)
பிறப்பு: 14 MAY 1944 இறப்பு: 05 NOV 2020

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும்,ஆவரங்காலை
வசிப்பிடமாக கொண்டிருந்தவரும், தற்போது கனடாவை வதிவிடமாக கொண்டவருமான கமலாம்பிகை சற்குணம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,குகரூபன்(பிரித்தானியா), ரூபவல்லி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தேவநாயகம், திலகவதி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நாகேஸ்வரமூர்த்தி, பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ராமகிருஸ்ணன், கமலாதேவி, கமலாதேவி, விஜயலக்ஸ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும், இராஜாம்பிகை, சர்வானந்தா, தயானந்தா, வசந்தாதேவி, காலஞ்சென்ற கபிலன், சுகிர்தா, தர்மசீலன், ஜெயசீலன் ஆகியோரின் அன்பு மாமியும்,அனுசுயா, அனுரதன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,அபிசா, அமிசா, அகிசா, சசிசன், தீபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 08 Nov 2020 3:00 PM - 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 08 Nov 2020 5:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Sunday, 08 Nov 2020 7:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரூபன் Mobile : +447900004977
ரூபி Mobile : +14163356371
திலகம் Mobile : +17184548993
பொன்னம்பலம் Mobile : +94766248326
சர்வா Mobile : +14168787552
மனோ Mobile : +14164732261

More

இடைக்காடு ம. வி பல்கலைக்கழகத் தெரிவு - 2019 (Oct. 29, 2020)

idaikkadu
Informed by : S. Selvavel
Contributed by : None
Card image cap

யா/ இடைக்காடு ம.வி
பல்கலைக்கழகத் தெரிவு 2019
1.ஶ்ரீ வடிவேலு தயாபன் பொறியியல் மொறட்டுவ
2.முருகையா பிருந்தாபன் கணணி விஞ்ஞானம் கொழும்பு
3. ரகுநாதன் சரண்யன் தகவல் தொழில்நுட்பம் களனி
4. நிவேதிகா சிவஞானசீலன் சித்த மருத்துவம் யாழ்ப்பாணம்

மேற்படி மாணவர்களின் சாதனையைப் பாராட்டுவதோடு எமது உளம் கனிந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றோம்.. மேலும் பல வெற்றிப் படிகள் தாண்ட வாழ்த்துகிறோம்.

More